
அரசியலும் கில்லியடிப்பதும் ஒரு சேரப் பிறந்தது. இந்தியாவாகட்டும், தென் ஆப்பிரிக்காவாகட்டும் அல்லது ஜிம்பாப்வே ஆகட்டும். அவரவர் லெவெலுக்குத் தகுந்த மாதிரி அவரவர் நாடுகளில் அரசியல் கில்லியடிக்கிறது என்பதே உண்மை.சர்வே என்பது ஒரு உப்புச்ப்பில்லாத விசயம் என்றாலும், சமீப காலத்து சர்வே ஒரு மிகச் சிறந்தக் காமெடியாகவேத் தெரிகிறது. NDTV மற்றும் தினமலர் போன்ற செய்தித்துறை ஊடகங்களில் எடுக்கப்பெற்ற ஒரு சர்வே. அதாவது, BCCI தலைவராக சரத்பவார் தேர்ந்தெடுக்கப்பட்டது கிரிக்கெட்டில் அரசியலைப் புகுத்திவிடுமா? என்பதே. கிரிக்கெட்டே ஒரு அரசியல் விளையாட்டு என்பது இவர்களுக்குத் தெரியாதா, என்ன? பட்டோடி, மாதவ்ராவ் சிந்தியா, ஜடேஜா போன்ற இவர்கள் அனைவருமே அரசியல் மூலமே கிரிக்கெட்டில் புகுந்தது. அதில் சிந்தியா அவர்கள் BCCI தலைவராக இருந்தது இவர்கள் அறியாததா? மேலும் கவாஸ்கர், டால்மியா போன்றோர் ஆடாத பிரதேச அரசியலா சரத்பவார் ஆடிவிடப் போகிறார். டால்மியா ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி பிறகு தான் கிரிக்கெட் போர்டு தலைவர். இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யும் கமிட்டி கூட்டத்தில் வெறும் வங்காள கிரிக்கெட் போர்டு தலைவருக்கு என்ன வேலை? அரசியல் என்பது அதிகாரத்தைக் குறிக்கும் சொல் என்றால் டால்மியா செய்யாத எந்தவொரு அரசியல் தலையீட்டயும் விடப் பெரிதாக பவாரால் செய்ய இயலாது. சரத்பவார் அரசியல்வாதி என்றால் அந்த அரசியல்வாதியையே தோற்கடிக்கக் கூடிய அரசியல் பாடம் தெரிந்தவர் டால்மியா. இல்லாவிட்டால் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத ஒருவரை நிறுத்தி தானே 4 ஓட்டுக்கள் போட்டு ஒரு டம்மியை BCCI தலைவராக்கிய அரசியல் சித்தம் அறிந்தவர் டால்மியா. சரத்பவார் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், பலகாலம் மத்திய அமைச்சராய் இருந்து மேலாண்மை செய்தவர். அவருக்கு கிரிக்கெட் அரசியல் எப்படி ஆடவேண்டும் என்று நன்றாகவேத் தெரியும். மற்றபடி இவர் பிரதேச அரசியலைப் பின்பற்றாமல் இருந்தால் சரி!
கொசுறு செய்தி!
ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு காரணம், கங்குலியின "அந்த" ஒரு சதத்தையே காரணியாக காட்டுகிறார்கள். இதனாலேயே தாய்புவின் சம்பளம் குறைக்கப்பட்டதும், அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகவும் தெரிய வருகிறது. ஆக மொத்தம் இந்திய கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதை விட உலகளவில் ஒரு தேசிய அணியை நிலைகுலையச் செய்த கங்குலிக்கு வாழ்த்துக்கள்.:)
சற்று முன்னர் வந்த செய்தி!
தனது பார்ம் ஐ நிருபிக்காமல் இருக்கவே மழை, புயல் அடிக்கும் சென்னையில் போட்டியை அமைத்ததற்காக புதிதாக பதவியேற்றுள்ள BCCI தலைவர் சரத்பவார் மீது கங்குலி குற்றஞ்சாட்டியுள்ளார். :)
1 comments:
செய்தியை விட கொசுறு சூப்பர்..
கொசுறைவிட.. சற்றுமுன் வந்தது ரொம்ப சூப்பர் :-))))))))))
-
செந்தில்/Senthil
Post a Comment