9/03/2009

என்ன கொடுமை கெழவா இது?

தட்ஸ்தமிழ் செய்தி பின்வருவன:

சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்திருப்பதையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி [^] வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த துயரத்தில் தமிழகம் [^] முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ரெட்டி மறைவுக்கு கரூரில் அஞ்சலி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜகேகர ரெட்டி மறைவையொட்டி, அகில இந்திய கைவிஞர் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜகேகர் ரெட்டி மரணம் ஆந்திராவை தாண்டி தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கரூரில் அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் விசு.சிவக்குமார் தலைமையில் அக் கட்சி அலுவலகத்தில் ரெட்டி படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ரெட்டி மறைவு குறித்து அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் விசு.சிவக்குமார் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அரசியல் [^] அரங்கில் தனி மரியாதைடன் விளங்கியவர் ராஜசேகர ரெட்டி. அவரது தனி மனித ஒழுக்கம், நற்பண்புகள், ஏழைகளுக்கு உதவுதல், மனிதாபிமானம், போன்றவற்றி அவருக்கு நிகர் அவர் தான். அவரது இந்த நற்பண்புகள் தான் அவரை நல்ல அரசியல்வாதி என மக்கள் மனதில் பதிய வைத்தது.

முதல்வர் [^] ராஜசேகர ரெட்டியின் இழப்பு ஆந்திர மக்களுக்கு பெரும் இழப்பு. ஆந்திராவின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கலாக இருக்கும் என்றார்.

புதுச்சேரியிலும் அரசு விடுமுறை...

இதேபோல ராஜசேகர ரெட்டி [^]க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி அரசும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கவுள்ளது. இதற்காக நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


என்ன கொடும கருணாநிதி இது? அண்டை மாநில முதல்வர் இறந்துட்டாருங்கறது வருத்தமான செய்தி தான். அதுக்காக ஒரு 2 நிமிசம் அரசு அலுவலகங்கள்ல மவுனம் காக்கலாம். ஆனா ஒரு நாள் அரசுவிடுமுறைலாம் ஓஒவரு. ராஜசேகருகாரு தமிழ்நாடும் அதைச் சார்ந்த திராவிட நாடும் உருவாகக் காரணமா இருந்தாரா? இல்ல நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? இதுக்கு முன்னாடி மரித்துபோன அண்டை மாநில முதல்வர்கள், முன்னாள்கள் மற்றும் ஜே எஃப் கென்னடி, நிக்ஸ்ன், இன்னும் ஜெயவர்த்தனே, பெனசீர் புட்டோ, ஜியா உல் அக்குன்னு எல்லாருடை நினைவு தினத்துக்கும் மரியாதை நிமித்தமாகவும்...உணர்வுபூர்வமாகவும் அஞ்சலி செலுத்த ஒவ்வொரு நாளையும் விடுமுறையாக அறிவிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

8/29/2009

செந்நில மனிதனின் பாம்புக் கனவுகள் 1/18


இளையபிராயத்திலிருந்தே செம்மண், செந்நிறம், செஞ்சட்டை, குருதி, பாலூர், திருவ்ஹீந்தபுரம் தொடர்ச்சி மற்றும் இன்னபிற கெடிலம் ஆற்றிற்கப்பாலான அனைத்து செந்நில முந்திரிக்காடுகள் மீதான் காதல். சிறுவயதில் மிதிவண்டியில் தெங்கிழக்கே கேப்பர்மலை வரையிலும், பின்னர் பாலூர், திருவஹீந்தபுரம், வேல்ராம்பட்டு மற்றும் குடியிருப்பு வரையிலான மிதிவண்டிப் பயனங்களும் வாழ்வில் மறக்கமுடியாதவை. பின்னர் ஆரோவில்லின் செம்மண் குழிகளும், கால்வாய்களும், கஞ்சா குடித்த போதையில் ஆடிய கூடைப்பந்து தொடங்கி முந்திரி மரக்கூரைகளின் வழியே வழிந்தோடும் முழுநிலவொளியோடு ஆன்னா தொடங்க அலமேலு வரை வறையரை இல்லாமல் புணந்த இரவுகளோடு செந்நிலத்தின் காதல் உயிரோடு கலந்திருக்கின்றது. சிறுவயதில் வயல்வெளியில் மோட்டார் நிலையத்தின் கட்டுமாணத்தின் போது பயன்பட்ட செம்மண்ணைக் குழைத்து உடல் முழுதும் பூசி மெழுகி களத்துமேட்டின் மீதுலர்த்தி மோட்டார் மூலம் இறைத்த நீரில் உடலலசி சுய இன்பம் செய்து புலரும் நன்பகலில் கண்ணானின் மனைவி தாயார் கிழவி கூழோடு கடிச்ச வெங்காயத்தின் நெடி இன்னமும் செம்மண்ணின் வாசத்தையே உணர வைக்கிறது.

அன்று சலீமுக்கு சுன்னத். குறி நுனியை அறுத்து துர் தேவதையை வெளியேற்றும் வைபவம். சலீமிற்கு அப்போது 10 வயதிருக்கலாம். எனக்கு 11. சலீமின் அம்மா மிகவும் அழகானவள். தெருவின் அனைத்து ஆண்களும் புணர ஆசைப்பட்ட உடலது என் அப்பா, சித்தப்பா உட்பட. ஆனால பின்னொரு நாளில் அப்பா அவளை போடவில்லை என் என்னிடம் பொய்யும் சொல்லியுள்ளார். பாருங்கள்...குறி அறுத்த கதை சொல்ல வந்த நான் குறி எழும்பும் கதை சொல்லிப் போகிறேன். சலீமின் உறவினர்கள் இசுலாத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், தமிழ் மக்களோடு இரண்டறக்கலந்துவிட்டதால் அது ஒரு காது குத்தும் வைபவத்தைப் போலவே எனக்குத் தெரிந்தது. சலீமின் மாமாக்கள் முஸ்தபாவும், ஃபைசரும் சாம்பிராணி போட்டு அரிசியும் பருப்பும் பைசாவும் அன்பளிப்பாகக் கொண்டுவந்து ஜீவனம் நடத்துபவர்கள். அன்று என்னமோ தெரியவில்லை...அவர்கள் சாம்பிராணியின் சாம்பலை உடல் முழுதும் பூசி ஜால்ராவைத் உச்சஸ்தாயில் தட்டிக் கொண்டிருந்தார்கள். சலீமின் உடல் முழுதும் செம்மண் அப்பப்பட்டிருந்தது. நானும் அப்பிக்கொண்டேன் அவசியமில்லாத போதும். இன்னும் மூன்று பேர் இருந்தார்கள் அதில் ஐஸ்கார பாயும் சேட்டும் அடங்குவார்கள். அனைவரும் வெரும் கோவணம் மட்டுமே கட்டியிருந்தோம். செம்மண் அப்பி படுக்கவைக்கப்பட்டிருந்த சலீமை சுத்தி ஆடிக்கொண்டிருந்தோம். முஸ்தபாவும், ஃபைசரும் ஜால்ராவைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். முஸ்தபாவின் அப்பா கார்ட்டூனில் வரும் முல்லா நசிருதீன் போலிருப்பார். தலைப்பாகையும், பச்சைத் துண்டோடும் காட்சியளிப்பார். வெள்ளிக்கிழமைக் காலைகளிலும் மாலைகளிலும் கொத்பாபள்ளியின் பள்ளிவாசலில் துப்பு கொடுப்பார். அவர் துப்பு கொடுத்தால் துர் தேவதைகள் நம்மை விட்டு ஓடிவிடும் ஆமாம் நம்புங்கள். அந்த வயதில் எனக்குக் காரணமில்லாமல் விரைக்கும். துர் தேவதைகள் என்னை சல்லாபிக்க விரும்புவதாகவும் அதனால் எனக்கும் சுன்னத் செய்யவேண்டுமென்றும் சொல்லி துப்பும் கொடுத்தார். ஆனால் என்னுடைய ஆயா தாத்தா முனியாண்டியை கும்முடுவார்கள்...அதனால் பள்ளிவாசலில் அவர் துப்பு கொடுத்து சொன்னதை நம்பவில்லை. அவர்மட்டும் சலிமின் இடப்பக்கம் அமர்ந்து அவனது குறியைத் தூக்கி ஒரு செந்நிற துணியில் நிறுத்திக் கட்டுபோட்டபடியே ரஃபி ரஃபி இல்லல்லா என்று உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருந்தார். சாம்பிராணியின் புகைசூழ்ந்து கூரை அமைக்க அதன் கீழ் நறுமண நாசியிலேற நாங்கள் ஆட ...சலீம் ஆவென் அலறியதில் கால்வாய்க்கு அந்தப்பக்கம் இருக்கும் யோவான் எழும்பிவிட்டார்.

அடுத்த நாளிரவு சலீமைப் பார்க்க நானும், அப்பாவும் சென்றோம். அம்மா இட்லி சுட்டுக் கொடுத்தனுப்பினாள். இப்போது சலீமும் நானும் மட்டும் அறையில் இருந்தோம். சலீமின் அம்மாவும் என்னுடைய அப்பாவும் சமையல்கட்டில் இருந்தார்கள். ச்லீமின் வீடு மிகவும் சிறியது. கதவைத்திறந்தால் தாழ்வாரம் அந்தப் பக்கம் மூலையில் சமையல்கட்டு. இந்தப் பக்கம் கதவில்லாத அறை அங்கு தான் சலீமின் குறி விரைத்த நிலையில் ஒரு செந்நிற ரிப்பனில் நிலைக்குத்தாக கட்டியிருந்தார்கள். ஈ அண்டாமல் விசிறிக்கொண்டிருந்த சலீமின் அம்மா அப்பாவோடு சமையற்கட்டில் ஒதுங்க நான் விசிறியை எடுத்துக் கொண்டேன். சமையற்கட்டில் சிரிப்பொலியும், வலையள்கள் குலுங்கும் சத்தம் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சலீம் அவனுடைய வேல்கம்பைக் காட்டி முசல் பிடிக்க்ப் போலாமா என்று கேட்டான் என்னை. அவனது குறி விரைத்துக் கொண்டிருப்பதால் துர்தேவதைகள் அவனைப் புணர்ந்து கொண்டிருந்தன. மேலும் இன்னமும் பச்சை ரத்தம் கசிந்து கொண்டிருப்பதால் துர்தேவதைகள் மட்டுமல்லாமல் பாம்பும் அவனை அண்டி வருமென்பதாலும் அவன் இப்போது எதைத் தொட்டாலும் தீட்டென்பதாலும் நான் வேண்டாமென்றேன். அவன் ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்து அவனது குறி மற்றும் புடுக்கை மறைத்துக் கொண்டு இப்போ ஏதும் நம்மை அண்டாது நாம் போகலாமென்றான். இப்போது சமையற்கட்டில் கிறக்கமான முனகல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

அருகில் இருப்பது முத்தையாவின் தோட்டம் மட்டுமே. முயல்களும், குள்ளநரிகளும், வாவியும், தேவாங்குகளும் அதிகமாய் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு தோட்டம். அங்கு ஒரு சுனைமரம் இருக்கிறது, எப்போது நீர் சுரந்துகொண்டிருக்கும் அதனுள்ளிருந்து. அதனுள் தான் இவர்கள் அனைவரும் இளைப்பாருவார்கள். அந்த சுனைமரத்தின் பெயர் காட்டுச்சுரக்காய் மரம். வாவி ஒரு கனவுப் பாம்பு. அவனை நான் இதுவரைக் கண்டதில்லை. ஆனால் பள்ளிவாசல் பாய் சொல்லுவார் வாவி தான் கால்வாயாய் நெளிந்து வளைந்து ஓடிக் கொண்டிருக்கிறானென்று. நான் எப்போதும் நம்பியதில்லை. சலீம் வேல்கம்பை எடுத்து மரத்தினடியில் குத்தினான். ஒரு தேவாங்கு மாட்டியது. சுட்டுத்திங்கலாமென்றான், வேண்டாமென்றேன். ஏனென்றால் சலீம் தீட்டுபிடித்தவன். அவன் கைபடும் எல்லாவற்றிலும் துர் தேவதைகள் குடிகொண்டிருக்கும். சலீம் கோபமடைந்தான். மறுபடியும் வேல்கம்பை குத்தினான், இப்போது செந்நிறக் காட்டுமுயல். சலீம் சந்தோசத்தில் குதித்தான். நீரை செந்நிலத்தில் குழைத்து உடலெல்லாம் பூசிக் கொண்டு திருமணச் சடங்கிற்கு தயாராகி விட்டதாகக் குதித்தான். ஆமாம், குறியறுப்பு சடங்கிற்குப் பின் ஒரு நன்னாளில் ஊர்ப்பெரியவர்களோடு நாங்கள் முயல் வேட்டைக்குச் செல்லவேண்டும். என்றைக்கு நாங்கள் வேல்கம்பால் முயலை வேட்டையாடுகிறோமோ அன்று நாங்கள் குடும்பப்பொறுப்பை ஏற்கத் தயாராகிவிட்டோமென்பதாக ஒரு நடைமுறை.

அது துர்தேவதைகளின் சதி இதை நாம் சுட்டு உண்ண இயலாது. வா...சென்றுவிடலாமென்று சொன்னேன்.

சலீமிற்கு வெறியேற்றிவிட்டன துர்தேவதைகள். மறுபடியும் நீரினுள் குத்தினான். வாலைமீன் அகப்பட்டதாக அரற்றினான். இந்நேரம் நான் வாவியின் நினைவில் மூழ்கியிருந்தேன். வாவியை அண்டாதே...கோபக்காரன் அவன் என்றேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....உ உ உ உ உ...ஊ ஊ ஊ ஊ ஊ...ய ய ய ய் ய ய ய் ய...அ அ அ அ அ...ஆஆஆஆ...என்றப் பாடியபடி வாவி வந்தான்...வாவியில்லை நீர் தான அலையெனப் பெருகி சலீமை உட்கொண்டது. ஓடினேன் கால்வாயை நோக்கி. சலீம் கதறினான்...அவனது அப்பாவை அழைத்துவரச் சொன்னான். நான் இங்கே இருக்கிறேன் என்றான். எங்கு என எனக்குத் தெரியவில்லை...அப்பா இப்போது முற்றத்திலிருந்தார். குளித்து முடித்திருந்தார்...ஆமாம் சலீமின் அம்மாவும் தான். இப்போது முன்னைவிட அழகாக இருந்தாள். கண்ணுக்கு மைதீட்டி இருந்தாள்.
அப்பாவிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு சலீமை நோக்கி மறுபடி ஓடினேன். சலீம், வாப்பா இங்கே இருக்கிறேன் என்ற குரல் மட்டும் எனக்கு கேட்க...நான் ஒரு இடத்தை தோண்டுகிறேன். இப்போது ஐஸ்கார் பாய் வருகிறார். அவர் தான் சலீமின் அப்பா என நினைக்கிற நேரத்தில் என்னுடைய அப்பாவும் வருகிறார். சலீம் இப்போது கால்வாய்க்கு அருகில் இருந்து கூச்சலிடுகிறான். ஐஸ்கார் பாயும், என்னுடைய அப்பாவும் மாறி மாறித் தோண்டுகிறார்கள் குரல் வந்த இடங்களிலெள்ளாம்.

பள்ளிவாசல் பாய் சொல்கிறார். சலீம் எமது சடங்கை மீறிவிட்டான். அவன் வாவிக்கே சொந்தம்.

கால்வாய் தான் வாவி
வாவி தான் கால்வாய்
கால்வாய் அது கால்வாய்
அல்ல காலத்தின் வாய்
காலுக்கும் வாய்க்கு இடைப்பட்டது
வாய் வழியே போகும் ஆனால்
காலின் வழியே வராது

திரும்பிப்பார்க்கிறேன் ஐஸ்கார பாயும் இல்லை, எனது அப்பாவுமில்லை. ஆனால் குழம்பினேன் சலீம் அவனது வாப்பாவை அழைத்த போது ஏன் என் அப்பாவும் வந்தாரென்று.

8/17/2009

முடவனை பகிடி செய்யும் பாம்பு

பாம்பு என்றாலே எனக்கு ரொம்பப்பயம். பயந்து கொண்டேயிருப்பேன், எப்போது வரும் எந்தவுருவில் வருமென. எப்போதிலிருந்து பயமென்றால "பல்"லிக்கு சாமியேறியதிலிருந்து. சரசுவதியின் புருசன் ப்ளவர் மில்லில் தினக்கூலி. சரசுவதி எங்கம்மாவிற்குதவியாக பாத்திரம், துணிகள் சலவைசெய்து கொடுப்பாள். அவளும் தினக்கூலி? எனக்குத் தெரியாது. வயதேறியவளாக இருந்தாலும் வனப்பாக இருப்பாள். திரண்டுருண்ட அங்கங்கள் தீயையேற்றும் எனது உடலில். ஏறிய தீ அவள் முகத்தைக் கண்டதும் அல்லியிலையின் நீர்த்திவலைகளாய் ஓடிவிடும். ஏனென்றால் அவளுடைய அகன்ற வாயில் பாம்பு புற்றினைப்போலி துருத்துக்கொண்டிருக்கும் பற்கள். அதனால் அவள் "பல்"லி. அவளை நான் எப்போதும் அப்படித்தான் கூப்பிடுவேன். அவள் அங்கங்களை நினைத்து சுய இன்பம் செய்யும்போது அவள் எனக்கு "ப்ளோ ஜாப்" கொடுப்பதாக நினைத்தாலும் எனக்கு சுருங்கிப்போகும்...

எங்கு விட்டேன்? ம்...பாம்பு ...பாம்பென்றால் எனக்கு ரொம்பப்பயம்.

சரசு தோட்டத்து முற்றத்தில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய அங்கங்களைப் பார்வையால் புணர்ந்துகொண்டிருந்தேன். காலையா? மாலையா? எனத் தெரியவில்லை. ஏனென்றால் நான் காலில் பூட்ஸ் அணிந்திருந்தேன். அதனால் காலையில் பணிக்குச் செல்லும் முன்னரா அல்லது மாலை பணியிலிருந்து திரும்பிய பின்னரா எனத்தெரியவில்லை. அது 2001 மா, 2002ஆ அல்லது 2000மாவெனச் சரியாக நினைவில்லை. இல்லையில்லை 2002 அல்லது 2003கத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் '01-'02ல் நான் பெங்களூரில் இருந்தேன். தோட்டத்து முற்றத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் அது வந்தது. சின்னக்குச்சியைப் போன்று படுத்துக் கொண்டிருந்தது. மாலை நேரம் தானென நினைக்கிறேன். ஏனென்றால் தொலைவில் இருந்த புளியமரமும் கருப்பாய் இருந்தது அதனால் இருள் கவ்விக் கொள்ளவிருந்தது. இதென்ன குச்சியென பூட்ஸ் காலால் எத்தினேன்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று சீறி எழுந்தது அது. அது என்னுடைய ஈகோவை தனது சீற்றத்தால் சீண்டி விட்டது. நான் பூட்ஸ் போட்டிருந்தேன். தரையிலிருந்து ஒருஅடிக்கும்...இல்லையில்லை...இருக்காது ஒரு அரையடிக்கும் அதிகமான உயரத்தில் எம்பி உஸ் உஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. நான் நினைத்தேன் அததுவினுடைய சுவாசக்கோளாறென்று. ஆனாலும் தலையை அப்படியே நசுக்கினேன். ஹா ஹா ஹாவென சிரிக்கிறேன். அதனுடையத் தலையைத்தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றது புளியமரத்தினடியில். காரிருள் கவ்விக் கொண்டது. யாரும் பார்க்கவில்லையென நினைத்தேன். சரசுவாகிய "பல்"லி எழுந்துச் சென்றுவிட்டாள். நானும் சோலிமுடிந்தது என்று எதிர்வாசலில் கடை வைத்திருக்கும் கோகிலாவை புணரச் சென்றுவிட்டேன்.

கனேசனின் மனைவி ஓடிவந்தாள். முருகாம்மா, முருகாம்மா...என் பெயரை யாருமே சொல்லத் துணிந்ததில்லை அதனால் என்னுடைய அண்ணனின் பெயர் சொல்லித்தான் எங்கம்மாவை மட்டுமல்ல எங்கப்பாவையும் சேர்த்து அழைப்பார்கள். ஹா ஹா ஹா அந்த பயம் இருக்கட்டும். சரசிற்கு சாமிவந்து மயங்கியதில் '95ல் ஒம்மவனுக்கு போட்ட அம்மைக்கு அம்மா மாரியாத்தாவுக்கு கூழ் வெக்கல அதனால ஒன்னப் பாக்கவந்த எந்தலையை ஒம்மவன் நசுக்கிட்டான். அதனால் ஒம்மவனுக்கு மொட்டையடிச்சு எனக்குக் கூழ் ஊத்து. என்னாது? யாருக்கு மொட்டை? ஒம்மால...அந்த வெள்ளியில் மாரியம்மனுக்கு கூழ் மட்டுமல்ல, கஞ்சியும் கருவாடும் சேர்த்து கொட்டப்பட்டது.

அதன்பிறகு நாளாக நாளாக அதுவும் வளர்ந்து கொண்டேவந்தது. சில சமயத்தின் சிங்கமுகமும், சில சமயத்தில் சேவல் முகமும் சில சமயத்தில் இரண்டும் சேர்ந்து ஒன்றன் தலையினுள் இன்னொன்றுமாக மறைந்து என்னைப் பகிடி செய்யும். இதனாலேயே கோட்டூரில் இருந்த வீட்டைவிட்டு படூரோடு சென்றுவிட்டேன்.அங்கேயும் கல்லூரியிலிருந்து நடந்து வரும்போது "சொகுபஸ்" "சொகுபஸ்" என் அழைத்து அது என்னை வெறுப்பேற்றும்.சொகுபஸ்னா என்னன்னு தெரியுமா? அதை யேசுவாவைத் தான் கேக்கவேண்டும். நான் அவனை ஒரட்டுக்கையன் என்றழைத்தால் அவன் என்னை சொகுபஸ் என அழைப்பான். ஏன்னா, சின்ன வயசுல தந்தைபெரியார் "ரூட் பஸ்" செவப்பு, ஆரஞ்சு, பழுப்புல கோடு போட்டிருக்கும். எப்போதுமே லைனில் நிறுத்தமாட்டான். அதனால் அப்பவே புரச்சி செய்யனும்ன்ற ஆசையில் கருங்கல் எடுத்து இருக்கனன். நங்கென்று ஒடுக்கு போட்டுகிச்சு. நிறுத்தான்ல அப்புறமா? சட்டைய கொத்தா பிடிச்சு டேசன்ல போடறேன்னு சொன்னான். நா தூக்கி கும்பிட்டு பம்மினன். உட்டுட்டான். இதை சிரித்துக் கொண்டே பார்த்த யேசுவா "சிகப்புபஸ்"ஸை மருக்கி "சொகுபஸ்" ஆக்கிவிட்டான்.

இதனால் இனி கிரவுண்ட் ப்ளோர்ல ஸ்டே பண்ணக்கூடாதென்று முடிவு செய்து அதன்பிறகு திருவான்மியூரிலும் சரி வீட்டிலேயும் சரி இங்கேயும் சரி அப்பர் லெவல்லேயே தான் தூங்கிக்கொண்டிருந்தேன் இப்பொழுது இருக்கும் வீடு தவிர்த்து.

ஒருவாரமாய் இடது காலை அசைக்கமுடியவில்லை. இப்போதிருக்கும் வீடு ஒரு "க்ரேன்னி ப்ளாட்". ஆனாலும் அது வந்து தொந்திரவு கொடுத்ததில்லை. போனமுறையில் வந்த பருவமழையின் போது நான்காம் வீட்டு "க்ராப்பர்"ல் அது வந்தது என்று ஃபிலிப் சனிக்கிழமை பார்ஸ்டூல் செய்து கொண்டே சொன்னான். எனக்கு ரொம்பப் பயமாய் இருந்தது. சரியென இரண்டுக்கும் மேற்பட்ட வலி நிவாரணியைப் போட்டுக் கொண்டு தூங்கிப்போனேன். திடீரென அன்று நான் சிரித்த மாதிரி ஹா ஹா ஹாவென சிரித்தது அது. அடடா...இங்கேயும் வந்துவிட்டதா அது. நானா? ஸ்டைல் ஆள் தான் போலவென நினைத்துக் கொண்டு சரி வந்ததுதான் வந்தாய் இங்கே வா என் தலைக்கருகில் வந்து எனது குரல் வலையைக்கடி என்று கூறினேன். மறுபடியும் பலமாய் சிரித்து, அவனெல்லாம் ஆஸ்திரேலியா போய் என்ன செய்யப் போறானென்று ஜெகன் குரலில் பேசியது. ஜெகனை அறவே பிடிக்காது எனக்கு. ஏனென்றால் அவனுக்கு ரஜினி பிடிக்கும், ரிசர்வேசன் பிடிக்காது. கருப்பைய்யாவை பிடிக்கும் என்னைப் பிடிக்காது. அவனைப்பொறுத்தவரையில் நான் ஜோசப்பில் படிப்பத்ற்கே தகுதியற்றவன். நான் எப்படி டேபிள் டென்னிஸ் விளையாடலாம்? நான் எப்படி கிரிகெட்டில் அவனை ரன் அவுட் செய்ய இயலும்? நான் எப்படி அவுஸ்திரேலியா போக முடியும்? ஹும்ம்...என்னவோ ...இப்படித்தான் அதுவும் அன்று திரும்பத் திரும்பச் சொல்லியது.

நாட்களுக்கேற்றார் போல் அதுவும் இப்போது இரண்டடியிலிர்ந்து ஆறேழடிக்கு வளர்ந்திருந்தது.

நீ எப்படி உள்ளே வந்தாய்? இடது காலை யாரோ கத்தியால் வெட்டி கல்லைக் கட்டி இழுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு.

ஹா ஹா ஆறு மாதத்திற்கு முன்னர் நாலாம் வீட்டுக்கு "க்ராப்பர்"ல் வந்து மாட்டிக் கொண்டானே அவன் என் அக்காமகன். இங்கே ஜே சி யூ வில் படிக்க வந்திருந்தான். அவன் தான் நீ இங்கெ இருப்பதாகச் சொன்னான். அவன் யூஸ் பண்ண அதே சிஸ்டம் தான் நானும் யூஸ் பண்ணேன். கக்கூஸ்லயே உன் புடுக்கை போட்டிருப்பேன். காலில்லாம அவஸ்தை படற அதான் விட்டேன்.

அடப்பாவிகளா? நீங்களும் அவுஸ்திரேலிய இம்மிகிரேசன் ஓட்டைகளை கண்டுபிடித்துவிட்டீர்களா?...ம் இன்னைக்கு நீயா? நானா? ஸ்டைல் கொலை தானென்று நினைத்துக் கொண்டேன்.

பேசிக்கொண்டேயிர்ந்த அவன் என் கட்டிலின் கால்வழியாக ஏற முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தான். அந்த சிவப்பு சிடார்ன் வழுவழுப்பு பூச்சு எனக்கு அரணாக இருந்துகொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்தது அது எனத் தெரியவில்லை, தொங்கிக்கொண்டிருந்த படுக்கைவிரிப்பை கடித்து ஒரு 360 அடித்தது. அடித்ததில் வால் எனது இடது காலில் விழுந்து பலமாய் வெட்டியது. அது இப்பொழுது கருப்பாயில்லை பழுப்பாய் இருந்தது. ஏன் நிறமாறி விட்டாய் என்றேன்?

இம்மிகிரேஷனுக்கு சுலபமாய் இருக்கும் மேலும் எனக்கும் வயதாகிறதல்லவா என்றது.

இப்போது கெஞ்ச ஆரம்பித்தேன். என்ன வுட்டுடு. எப்போவோ பண்ணதுக்கு இப்போ ஏன் டார்ச்சர் கொடுக்கற? ஏற்கனவே பைக் ஆக்ஸிடெண்டு, இப்போ "னீ" ரீகண்ட்ஸ்ட்ரக்க்ஷன்.இந்த வருசம் எனக்கு ரொம்ப மோசமா இருக்கு? நீ வேற இப்போ!

அது பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று எனது வார்டுரோபின் கண்ணாடிகதவில் துப்பி இதைப்பார் என்றது. பார்த்தேன்.

தண்டவாளத்தின் அடியில் சாலை வளைகிறது
திண்டிவனம் போல் இருக்கிறது
சாலையின் நடுவே தோலுறிக்கப்பட்ட ஒரு ஆண்
கையும்காலும் சேர்த்து விலங்கிடப்பட்டது
அப்பா என்னை ஒயர்கம்பியால் கட்டியது போல்
மறுபுறம் குட்டிச்சுவர்
ஒரு டிரக் அவன்மீது ஏற அவன் துடிக்கிறான்
குட்டிச்சுவற்றினடையில் ஒரு ஸ்னைப்பர்
செமி ஆட்டொமேட்டிக் என நினைக்கிறேன்
எனது வலது காலின் அருகில் ஒரு நாய்
ஓநாயின் வெறியைவிட அதிகம்
அதன் கண்களில்

எனக்கு புரியவில்லை. என்னவென திருப்பிக் கேட்டேன். அவன் யாரைப்போன்றிருக்கிறான் என என்னை திரும்பக் கேட்டது அது.

டேன் பிரவுனின் "சைலாஸ்" போல இருக்கிறான் என்றேன் நான்.

ஹா ஹா ஹா...இன்னுமொரு வாய்ப்பளிக்கிறேன் என்றது அது.

நான் யோசித்து, "நான் கடவுள்" பாலாவின் "தாண்டவன்" போலிருக்கிறான் என்றேன்.

மறுபடியும் பலமாய் சிரித்தது அது...சிரித்து...நிறுத்தி...உன்னைத் தோலுரித்துப் பார்த்தேன் நீ தான் அது என்றது அது!

மைக் ஒரு கிவி. அவனுக்கு போன் போட்டேன் என்னுடைய சித்ரவதையைக் கூறினேன். நீ அந்த போதை வஸ்துக்களில் இருந்து விடுபடவேண்டும் என்றான். இப்போது கால்வலி பரவாயில்லை. பாம்பென்றால் எனக்கு ரொம்பப் பயம்.

It's just a s l o w . . . day...moving in to a s l o w...night



5/18/2009

வேங்கைகளாக மீண்டெழுவோம்

1986லிருந்து இதுவரை 3000 கோடிமுறை எமது ஈழத்தலைவனைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு 10000கோடிமுறை நேற்று நன்பகலிலிருந்து கொன்று தின்று கொண்டிருக்கிறார்கள். இனவெறி பிடித்த இந்திய சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு மீண்டும் வேங்கையாய் பாய்ந்து தாக்குவான் எமது தலைவன். அதுவரை பால்சோறும் சம்பலும் தின்று குசு விட்டுக்கொண்டிருங்கள்.

கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். வெறும் 300 மீட்டருக்குள் முடக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏறித்தப்புகிறார்களாம். இவர்கள் குறி பார்த்து சுட்டார்களாம். நல்லதொரு ஃபிக்ஷன் வகை கதைக்கு கூட இது ஏற்பாகாது!

இதுவரை இறந்து போன் சிங்கள காடையினரது 30,000 குடும்பத்தினரும் ராஜபக்ஷவை குண்டியடிக்கும் போது சிரிக்கும் உலகம். அதுவரை நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்.

சந்தடி சாக்கில் இட்லி வடையின் பார்ப்பனக்குசு ராஜபக்ஷவின் சிங்களக்குசுவை முகர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கிறது.

கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.

வரலாறு என்றும் துரோகிகளை மன்னிக்காது.

வருவான் எம் தலைவன்!!!

4/26/2009

அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புறநானூற்றுத் தாயின் வாரிசு, கவிஞர் தாமரையின் எழுச்சிமிகு உரை







பல் பிடுங்கிய பாம்பாக, காயடிக்கப்பட்டக் காளையாக ஆனால் குடும்பமும், கட்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இந்தியாவின் முதன்மை பணக்காரராவதற்கு எடுக்கும் சிரத்தையில் சிறிது கூட ஈழத்தமிழர் விசயத்தில் காட்டாமல்; தமிழ் மொழி, தமிழினத்தின் முதன்மை வஞ்சகனாகவே இருந்து கொண்டிருக்கும் கிழட்டுக்கம்முனாட்டி கருனாநிதிக்கும் அவன் பால் கூட்டணி கொண்டுள்ள சோனியா காங்கிரஸிற்கும் பாடம் புகட்டும் வகையில் தமிழுணர்வாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணியில் உள்ள மதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களுக்கும் வாக்களித்து திமுக - காங்கிரஸின் தமிழர் விரோத கூட்டணிக்குப் படுதோல்வியை அளிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.



சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை

3/23/2009

"தல"க்கவசம்


வழக்கமாக திங்கட்கிழமை என்றாலே, சோம்பேரித்தனமும் எரிச்சலும் சேர்ந்துக் கொ"ல்லும்". அதனாலேயே திங்கட்கிழமைகளில் 8:40 மணிக்கும் அலுவலுக்குச் சென்றதாக சரித்திரம் இல்லை. அது இன்னும் சில காலத்திற்கு அப்படியாகவே தொடர்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. இன்றும் அப்படித்தான் ஆனால் வழக்கத்திற்கு "எதிராக" முரண்டுபிடித்து 8:10க்கே கிளம்பி 8:20 போல் அலுவலுக்குச் சென்று இவ்வாரத்திற்கான் செயலியை, செயல் நிரலியை (எப்படி சொல்றதுன்னு தெரியல - வீக் ஷெட்யூல்னு வெச்சிக்கோங்க) எனக்கு உதவியாக இருக்கும் வரைவாளருக்குக் கொடுக்கவேண்டி, மேலும் பல site issuesயையும் நினைத்துக்கொண்மடே நம்ம செஞ்சிருத்தையைக் கிளப்பிக்கொண்டுச் சென்றேன். இடது ஓரத்தில் இருக்கும் மிதிவண்டி பாதையையொட்டிய முதற்பாதையில் தான் எப்பொழுதும் செல்வது வழக்கம். ஏனென்றால் அது மிதவேகத்தில் ஓட்டுபவர்களுக்கானது. காலை நேரங்களில் அவனவன் காரை அவசரகதியில் ஓட்டுவதால் இடப்பாதையானது காலியாக இருக்கும் அங்கு 3வது கியரைப்போட்டு முருக்கினால் 70 கிமீ வேகத்தில் 7 நிமிடத்தில் அலுவலை அடையலாம்.

அப்படித்தான் இன்றும் முறுக்கினேன். வழியில் கார் சேல் போட்டிருந்ததால் இடப்பாதையில் சிறிது போக்குவரத்து நெரிசல். சரியென்று கியரைக்குறைத்து இரண்டாவது கியரில் 40 கீமியில் தான் சென்றுக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டி கொஞ்சம் வேகத்தைக்கூட்டிய மாதிரித் தெரிந்ததால் நானும் வேகத்தக்கூட்டினேன்...எனக்கும் அந்த வண்டிக்கும் இடையேயான இடைவெளி 10-12 மீட்டர் இருக்கும். இடையே நாளை நடக்கவிருக்கும் க்ளையண்ட் மீட்டிங்கில் பேசவேண்டிய விடயங்களைத் தயார் செய்துகொண்டேயிருந்தேன்...முன்னால் சென்றுக் கொண்டிருந்த அந்த வெள்ளைநிறக்கார் பின்னோக்கி வருவது போல் உணர்ந்தேன், ஆனால் நான் தான் 60ல் முன்னேறிக்கொண்டிருந்தேன். ..அடடா அவனுடைய அபயவிளக்கு எரியவில்லையே????

சுதாரித்து இருபிரேக்குகளையும் பலம் கொண்டமட்டில் அழுத்தினேன். முன் சக்கரம் அவனது காரில் மோதாமல் இருக்கவேண்டி வலப்பக்கமாக திருப்பினேன். திருப்பியதில் அப்படியே இடப்பாதையில் 180 டிகிரியில்...டம், டமால், கிரீச்ச்ச்...ச்சக் ச்சக்...கால் முட்டித் தேய்ந்துகொண்டிருக்க, கையை ஊன்பதற்கு முன்பாக தார்சாலையில் கைமுட்டி டங்கென இடித்து சர்ரென்று இழுத்தது...அதேவேகத்தில் மண்டை நொங்கென இடித்தது. இவையனத்தும் ஒரு நொடியில் நடந்தே முடிந்துவிட்டது. எனது உடற்கவச உடுப்பு சில இடங்களில் தேய்ந்து உள்ளிருக்கும் பஞ்சு வெளியே துருத்திகொண்டிருந்தது. சாய்ந்த வண்டியின் எஞ்சின் இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கிறது...முன்னால் நின்ற கார் அப்படியே நிற்கிறது...பின்னால் ஒரு BMW 4x4 இருந்து ஒருவர் ஓடிவந்து ஆர் யூ ஓகே? எங்கிறார். முன்னால் நிறுத்திக் கொண்டவர் இறங்கி என்ன செய்வதென்று தெரியால் அரைக்கதவைத் திறந்த நிலையில் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு களேபரத்திலும், குளு குளு கண்ணாடியோடு என்னுடையத் தலைக்கவசம் என்னுடைய மண்டையிலேயே இருக்கிறது. அப்படியே வண்டியைத்தூக்கி நிறுத்தி இடது ஓரத்தில் பார்க்கிங் செய்துவிட்டு ப்ளாட்பாரத்தில் அமர்ந்தேன். பின்னால் இருந்தவர் 000 போடவா என்றார். நான் கையையும் காலையும் தூக்கிப்பார்த்தேன் மடக்கிப்பார்த்தேன், எவ்வித சத்தமும் வரவில்லை ஆகையால் பெரிதான எலும்பு முறிவு எதுவுமில்லை என முடிவு செய்து, வேண்டாமெனக் கூறி அவருடைய உதவிக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவித்தேன்.

இப்போது தான் முன்னால் நிறுத்தியிருந்த காரில் இருந்த நபர் இறங்கி வந்து கேட்டார்...ஆர் யூ ஆல்ரைட், மைட்? அயாம் சாரி, த ப்லோக் இன் ஃப்ரண்ட் ஆஃப் மீ சடன்லி டர்ண்டு வித்தவுட் இண்டிகேட்டிங்...தட்ஸ் ஒய்...என இழுத்தார். நானோ தலை தப்பியது ஹெல்மட் புண்ணியம் என நினைத்து, டோண்ட் ஒர்ரி மைட், அயாம் ஆல் குட் எனக்கூறி அவரை வழியனுப்பிவைத்து...ஆபிஸுக்கு சிக் லீவ் போட்டு, நானே மெடிக்கல் செண்டரில் அப்பாயின்மெண்ட் வாங்கி கையில் காலில் என ப்ளாஸ்திரி போட்டு, வண்டியை பட்டறையில் விட்டுவிட்டு...காப்பீட்டு அலுவலிற்கு தொலைபேசிவிட்டு என்னுடைய ஹெல்மெட்டை தடவிப்பார்த்தேன், என் காலில் இருந்ததைவிட இருமடங்கு அதிகமான சிராய்ப்பு. என் தலையைத் தடவிப்பார்த்தேன், அது அப்படியே ஒரு உரோமம் கூட உதிராமல் அப்படியே இருக்கிறது இன்னமும்...

ஆகவே தலைக்கவசம் அணியுங்கள் மண்டைக்குள் என்னவாவது இருக்குதோ இல்லையோ மண்டை அப்படியே இருக்கவேண்டுமென்றால்...

பிகு: ஆம்புலன்ஸிற்கோ, காவல்துறைக்கோ தகவல் கொடுக்காததற்கான காரணம் நன்றாக மூச்சு விடும்போதே லைப் சப்போர்ட்டும், சலைனும் ஏற்றிகொல்லுவார்கள் என்பதினால் தான் :D

1/30/2009

எல்லோரும் செத்து தொலையுங்கடா


அறிவாளி புடுக்குகள் எல்லாரும் அவர் என்ன செய்வார் இவர் என்ன செய்வார் என இணையத்தில் கிழித்துத் தொங்க விடுதுகள். அதற்கு கூட வழியின்றி ஈகோ புழுத்திக் கண்ணை மறைக்க அழுவதற்குக் கூட சரக்கு அடிக்க வேண்டியிருக்கு.

உம்புண்ணியத்துல நல்லா தலையில அடிச்சு அழுதேண்டா முத்துக்குமரா!

எதுக்குத் தெரியுமா? நடைபிணமா சகல வசதிகளுடனும் சாக நாள் வராமல் கிடக்கும் ராமதாசு, கருணாநிதி, வைகோ மற்றும் இன்னபிற வெக்கங்கெட்ட கம்முனாட்டி பயலுகளுக்கு இன்னும் நாள் வரலையேன்னு...

எல்லாரும் கொளுத்திக்கிட்டும் செல்லடிச்சும் செத்துத் தொலையுங்கடா! இவனுங்க அரசியல் பிச்சை எடுத்து நல்லா இருக்கட்டும்.

10/29/2008

நன்றியும்...மன்னிப்பு கோருதலும்...

ந்து இறங்கியதிலிருந்தே வாந்தி பேதி தவிர்த்து இருமல் தலைவலி, மூக்கடைப்புச் சளி, பித்தம் மற்றும் இன்னபிற என்று இருக்கிற ஒவ்வாமையெல்லாம் ஒரு சேரத் தொ(ஏ)ற்றிக் கொண்டு வந்ததில் இன்று முழுதும் அலுவலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டு மருத்துவர் சிங் அவர்களைச் சந்தித்துவிட்டு ஸ்கைப்பில் மொக்கைப்போட்டுவிட்டு உருப்படியாக! ஏதாவது செய்யவேண்டுமென்று யோசித்ததில் பதிவெழுதலாம் அல்லது நான் சந்தித்த அல்லது என்னை நினைவில் வைத்து என்னையும் ஒரு பொருளாக மதித்து 2 மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு நன்றியாவது சொல்லலாம் என இதை எழுதுகிறேன். இதை எழுதி முடிக்கும்பொழுது நினைவில் இருக்குமோ இருக்காதோ? ஏனென்றால் சந்தித்தவர்களில் பாதி பேரின் முகம் கூட நியாபகம் இல்லை. இதற்கு என்னுடைய நியாபக சக்தியைக் குறைசொல்ல முடியாது மாறாக நான் விமானத்தில் மறதியாக :D விட்டுவந்த வாசிப்புக் கண்ணாடியை வேண்டுமானால் குறை சொல்லலாம். எனவே, என்னுடைய வருகையையொட்டி நான் தகவலனுப்பிய சொற்பனமானவர்களில் எனக்கு பதிலளித்தவர்களுக்கும், அவரவர் பணி மற்றும் இன்னபிற பலுவினால் பதிலளிக்காதவர்களுக்கும் முதல் நன்றி. வருவதையொட்டி தகவலை தவழவிட்ட தகவல் ஒலி(ளி)பரப்பாளர்களான லக்கி, அதிஷா, முரளிகண்ணன் ஆகியோர்களுக்கு முதலுக்கு முந்தைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். லக்கியிடம் முன்னமே கதைத்திருக்கிறேன், அதனால் அவரை ஓரளவுத் தெரியும். அதிஷா, முரளி ஆகியோரின் பதிவுகளை அவ்வப்போது பார்த்துவந்திருக்கிறேன். முரளி ஓரளவு சீரியசான ஆசாமியென்பதும்...அதிஷா ஒருகாலத்தில் நான் செவ்வனே செய்துவந்த காமெடியான பின்னூட்ட மொக்கச்சாமி என்பதுமாக கணித்து வைத்திருந்தேன். என்னவோ லக்கியும், முரளியும் போட்டிருந்த பொட்"டீ" கடை இணைப்பினால் பல மாதங்களுக்குப் பிறகு ஒரு பத்திருவது பேர் என்னுடைய வலைப்பூவிற்கு வந்து போயிருந்தனர். ஆகையால் இவர்களுக்கு சிறப்பு நன்றி. அத்தோடு நான் வணக்கம் சொன்ன அனைவருக்கும், எனக்கு வணக்கம் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

அது மட்டுமல்லாமல், இன்ப அதிர்ச்சியாக வரமாட்டேன் வரமாட்டேன் என்று பூச்சாண்டி காட்டிய முன்னமே வந்து சேர்ந்த பாலபாரதி, முன்னமே தகவல் கொடுத்துவிட்டதால் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத முகத்துடன் வந்திருந்த ரோசா அவர்களுக்கும் நன்றி. எழுத்து எவ்வளவு வலிமையான முகமூடி என்பதற்கு ரோசாவைப் போல் பலரையும் நினைவுகூர முடியும். நான் ரோசாவை ஒரு கம்மூனிஸ புரட்சியாளனாக எந்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஏனென்றால் அவருடைய எழுத்துக்கள் 2004 பிற்பகுதியில் வாசித்திருக்கிறேன். சிம்பு குறி அறுக்கப்பட வேண்டும் என அவர் எழுதிய பதிவு இப்போதைக்கும் எனக்கு சிரிப்பு மூட்டக்கூடிய ஆனால் ஆழமாக நம்மையே கேள்விக்குட்படுத்தும் பதிவு. இவரால் தான் நான் கூட குறி எனும் சொல்லை அனாசயமாகப் பதிவில் பயன்படுத்துகிறேன் என்றால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள்? ஆனால் அவர் என்னைப் போலவே இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற முகத்துடன் இருந்தார். அதே போல் கவிஞன் அருட்பெருங்கோ...அருட்பெருங்கோவின் அறிமுகம் நான் பதிவுகளை எழுதத் ஆரம்பித்த 2005ன் நடுப்பகுதியில் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஏன் இப்பொழுது கூட நான் (சு)வாசிக்க விரும்பும் பொழுது அமராவதி ஆற்றங்கரையில் அமர்வதுண்டு. காதல் ரசம் பனிக்கூழாய் கொட்டும். அவருக்கும் நன்றி. எதிர்பார்க்காத ஆனால் டிசெப்டிவான இன்னொரு அன்பர் சுந்தர். யோவ்ராம் சுந்தரை அவ்வப்போது வாசித்து வந்திருக்கிறேன். அவர் அதீதனாக மாறியபோது சில சமயங்களில் என்னை எனக்கே காட்டியிருக்கிறார். (அவர் தான் அதீதனாக மாறினாரா அல்லது அதீதன் சுந்தராக மாறினாரா என்பது பற்றி அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்)இவருடைய மறுபதிப்பு அல்லது மீள்பதிப்பு எழுத்துக்களுக்கு நான் ரசிகன். இவரை சந்தித்ததிலும் மிகவும் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள். டோண்டு ராகவன், நர்சிம் என்று நான் சந்தித்த நண்பர்களுக்கும் நன்றி. சிலரது பெயர்கள் நினைவில் இருந்து நழுவி :D விட்டதால் அவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களை சில மணி நேரங்கள் காக்கவைத்ததால் அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். யார் மன்னித்தாலும் பாலபாரதி மன்னிக்கமாட்டர் ஏனென்றால் ...அது அவருக்குத்தான் தெரியும். மாம்ஸ்...கூல் டவுன்...அப்புறம் நான் குளிச்சிட்டு தான் காபீ டேவுக்குள் வருவேன்னு அடம்புடிக்கக் கூடாது...சொல்ல்லிப்புட்டேன்.

இந்த முறையும் நான் வேண்டாமெனச் சொல்லியும் காலையிலேயை விமான நிலையத்தில் வந்து என்னோடு அலைந்து திரிந்த வரவணையானுக்கெல்லாம் நன்றி சொல்லி கொச்சைப் படுத்தமுடியாது. அதே போல் வரமாட்டேன் வரமாட்டேன் என்று பம்மி கடைசியில் டாஸ்மாக் வரை வந்த சுகுணாவிற்கும் நன்றி கிடையாது. சுகுணா deserves something better. அடுத்த முறையிலாவது மறக்காமல் இருக்கிறேனா என்று பார்க்கிறேன். துணைவியாருக்கு கொடுக்கவேண்டிய பரிசுப் பெட்டியையே எனது பயணப் பெட்டியில் போடாமல் விமானமேறியவன் நான். ஒரு தடவை என்னுடைய இடது கையில் பென்சிலை வைத்துக்கொண்டே பென்சிலை தொலைத்துவிட்டதாக அழுதவன் நான். எங்கப்பா கூட நான் பெரியவனாகி மனைவியோடு திருவிழாவிற்குச் சென்றால் சுலபமாக தொலைத்துவிட்டு வெறுங்கையோடு வருவேன் என்று கலாய்ப்பார். இப்போது புரிகிறதா நான் என் வாசிப்புக் கண்ணாடியை தவறவிட்டதில் தவறேதுமில்லையென்று?

இப்படியாக டாஸ்மாக்கில் நான் ஒரு சூடான பியருடனும், மற்றவர்கள் சோமபானத்துடனும் தொட்டுக்கொள்ள சுந்தர் கையோடு கொண்டுவந்த்திருந்த ஊறுகாயுடனும்...புகையுடனுமாக ஒரு தோசையோடு கழிந்தது இரவு. அடுத்த நாள் விடிகாலையில் எழுந்து வரவணையானூக்கு குட்பை சொல்லி சதாப்தி தொடர்வூர்தியில் துணைவியோடு சண்டைபோட்டு பெங்களூரூ போய் சேர்ந்த பொழுது மணி காலை பதினொன்றரை. ஆட்டோக்காரர் நான் கூறிய முகவரிக்கு வழி தெரியாமல் இந்திரா நகர் கே எஃப் சி தாண்டி இறக்கிவிட்ட பொழுதில் செந்தழல் ரவி அவருடைய சொந்த காரில் வந்து அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மதிய உணவாக சூடான பொங்கலும், கோஸ் பொரியலும், தேங்காய் சட்னியும் உடுப்பி சாம்பாருமாய் மணமணத்தது அவருடைய வீடு. கொஞ்ச நேரம் அவருடன் மொக்கை போட்டுவிட்டு மணி பார்த்தபோடு நன்பகல் பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது. மூன்றரை மணிக்கு எனக்கு பெங்களூரிலிருந்து கோவாவிற்கான விமானம் இருந்ததால், மொக்கை போட்டபடியே விமான நிலையத்தில் எங்களை இறக்கி விடுவதற்காக அவருடைய மகிழ்வுந்தை இயக்கியபடியே பார்ப்பனீயமும், பணியாரமும் என்று நியூரோசிந்தெட்டிக் ரிசெர்ச் பற்றி பேசி வந்ததில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த என் துணைவியார் விமான நிலையம் வந்தடைந்த பொழுது உறங்கிப் போனார்.

சும்மா சொல்லக்கூடாது. பெங்களூருவின் புதிய விமான நிலையம் பிரிஸ்பேன் விமான நிலையத்தைவிட தூய்மையாகவும் விசாலாமாகவும் இருந்தது. அப்படியே தரக்கட்டுப்பாட்டை பராமரித்தால் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இனி வரவிருக்கின்ற மற்ற நகரங்களின் நிலையங்களிற்கு ஒரு பென்ச் மார்க்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இப்போதைய ஷொட்டு:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிக்கு. முன்பெல்லாம் வெளியே இருக்கு பொட்"டீ"க்கடைகளில் டீ குடிப்பதற்கே அருவருப்பாக இருக்கும். பீடி தொடங்கி இன்னபிற தங்கராஜா பஞ்சடைத்த வெண்சுருட்டு வரை வகைவகையாக ஊதிக் கொண்டிருப்பார்கள் கூடவே, இரு இழுப்புக்கு மூன்று முறை தூ தூ வென துப்பிக் கொண்டிருப்பார்கள். இப்போதைக்கு அந்த தொல்லையிலிருந்து தற்காலிகமான விடுமுறை. மேலும் முக்குக்கு முக்கு நிற்கும் ஆட்டோக்காரர்களும் ஊதிக் கொண்டிருப்பார்கள். அதுவும் கட்.

இப்போதைய எத்து:

சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு. நூறு ரூபாய்க்குக் குறைந்து கேட்பதேயில்லை. வேண்டாமென்று கூறினால் எவ்ளோ சார் குடுக்கற? என பாண்டிபஜாரில் பேரம் பேசுகிற கணக்காய் இருக்கிறது.

6/07/2008

க்ளோபல் வார்மிங்கா? க்ளோபல் கம்யூனிஸமா?

இப்பொழுதெல்லாம் எழுதுவதற்கே ஆயாசமாக உள்ளது...முன்போல் வேலைப்பளு மட்டுமிருந்தால் பரவாயில்லை இப்பொழுது இன்னொரு கடமையும் :) கூடவே ஒட்டிக்கொண்டிருப்பதால் வேலை, வீடு, சமையல்,தூக்கம் + ஸ்கைப்பிங் என்று இவ்வருடத் தொடக்கத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது. ஸ்கைப் செய்வதால் இருக்கும் இன்னொரு சந்தோசம் என்னவென்றால் டிவியில் வரும் ஃபாரீன் கரெஸ்பாண்டண்ட், கெட் அவே, ஷெஃப் ராம்சே'ஸ் கிட்சன் நைட்மேர்ஸ் போன்றவற்றை தவறவிடாமலும் அதே சமயம் இணையத்தில் வட அமேரிக்கத் தேர்தல் நிலவரங்களையும், சில வலைப்பதிவுகளையும் தவறவிடாமல் பார்த்துக்கொண்டு நிகழ்காலத்தை ஒட்டியேப் பயணிக்க முடிகிறது. ஆனால் எழுதும் பொழுது இவ்வகையான பல்பணிகளில் ஈடுபடமுடிவதில்லை அதனாலேயே எழுதுவதற்கு அயற்சியாயிருக்கின்றது. மேலும் முன்போல் நம்மை சுண்டிவிடுகின்ற அல்லது எழுதத்தூண்டுகிற மாதிரியான பதிவுகளும் அவ்வளவாக வரவில்லை. அதைவிட இணையத்தில் கருத்துக்களைக் கொட்டி பரிமாற்றம் செய்துக் கொண்டிருப்பதைவிட நிச நிகழ்வுலகில் கம்மூனிஸம் (இந்தியாவைத் தவிர்த்து) இட ஒதுக்கீடூ, கிரீமி லேயர், மனுநீதியின் சனாதன சமதர்மத்தை எரிக்க வேண்டியதன் அவசியம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியமாகிறது. உதாரணத்திற்கு நம் குடும்ப உறுப்பினர்கள், நட்பு வட்டம் (அது கொஞ்சம் பெரியது அதில் ஏற்படுகின்ற வாக்குவாதங்கள் பெரும்பாலும் ஹார்ட் பிரேக்கிங்காக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது)

ப்ரெட்ரிஷ் எங்கெல்ஸ், கார்ல் மார்க்ஸ் ஆகிய சமூக விஞ்ஞானிகளின் பொருளாதார, அரசியற் தத்துவங்களைப் படித்த வலதுசாரிகளென்று அறிவித்துக் கொண்டவர்கள் அதை ஏன் மறுக்கவேண்டுமென்று ஒரு துளியளவு கூட கருத்தை வைக்கமுடியாது என்பதே உண்மை. அவ்வாறு கூறுகின்றவகள் நாம் வைக்கின்ற மய்யக்கருத்தில் சொல்லாடமுடியாது எங்கோ என்றோ எதற்காகவோ சிதறுண்டு போன சோவித் குடியரசைக் காரணம் காட்டி சிரித்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் இன்று நாம் அறிந்தோ அறியாமலோ ஒட்டுமொத்த உலக நாடுகளின் அரசுகளும் கம்மூனிஸ தத்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அல்லது மறைமுகமாகக் கம்யுனிஸக் கொள்கைகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. காரணம் இன்றும் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற கச்சா எண்ணெயின் விலை மற்றும் உணவுப் பற்றாகுறை, அதிமுக்கியமாக இவையிரண்டும் ஒன்றோடு ஒன்றுமாகப் பிணைந்து ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்ற குளோபல் வார்மிங். நகரங்களில் எந்திர வாகனங்களில் இருந்து வெளிவருகின்ற கார்பன் மற்றும் கந்தக வாயுக்கள் காரணி என்றால் கிராமப்புறங்களில் ஆடு, மாடுகள் அசை போடுவதால் வெளிவருகின்ற மீதேன் வாயுக்கள் காரணியாகின்றன. ஆக நகரமோ,கிராமப்புறமோ எங்கேயுமே தூய்மையான காற்று என்பதற்கு பேச்சேயில்லை. இத்தோடு உணவுப்பற்றாகுறையும் சேர்ந்து கொண்டிருக்கிறது இப்பொழுது. சாம் மாமா வழக்கம்போல் வளரும்/வளர்கின்ற நாடுகளை கைகாட்டி குற்றஞ்சொல்லுகிறார்.அதாவது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினால் அவர்களின் உணவுப் பழக்கங்கள் மாறியதால் உலகில் உணவுப் பற்றாகுறை ஏற்பட்டதாக வட அமேரிக்க புஷ் மற்றும் அய்ரோப்பிய கூட்டமைப்பும் பிரச்சாரம் செய்கிறது. ஆம்...வளரும் நாடுகளால் தான் உணவு உற்பத்தி தடைபட்டது. ஆனால் வசதியாக மறக்கடிக்கப்பட்ட விடயம் என்னவென்றால், பன்னாடு நிறுவனங்களால் பிச்சை போடப்பட்ட தாவர எரிபொருள் உற்பத்தியினால் வளரும் நாடுகளின் உணவு உற்பத்தி இன்று உலகமே பஞ்சத்தால் அழியக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதே வலைப்பதிவுகளில் தான் சில காலங்களுக்கு முன் இடதுசாரி பதிவர்களால் அன்னிய பொருளாதார காலனியதிக்கமும், இந்திய பன்னாட்டு அடிமை எண்ணங்களும் வேறொரு ரூபத்தில் கிழி கிழி என கிழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தவர்கள், இன்று உலக உணவு மற்றும் விவசாயக் கழகத் தலைவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? அவரும் தாவர எரிபொருள் உற்பத்தியினால் தான் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், அதை சமாளிக்கப் போதுமான அளவு நிதி இருந்தும் கைகள் கட்டப்பட்டிருப்பதால் ஏதும் செய்யமுடியவில்லை என்றும் கூறுகிறார்.

ஆக உணவுப் பற்றாகுறை - கச்சா எண்ணெய் உற்பத்தி - மாற்றுத் தாவர எரிபொருள் - க்ளோபல் வார்மிங் - இவ்வனைத்தையும் ஒன்றோடொன்று தொடர்புப்படுத்திப் பார்த்தால் மேற்கு அல்லது அமேரிக்க அய்ரோப்பிய மறுகாலனியாதிக்கம் மிக அழகாகப் புலப்படும். இதையே தான் இடதுசாரி மற்றும் விளிம்புநிலைத் தோழர்கள் கடந்த வாரத்தில் ஜ்யோவ்ராம் அவர்களின் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு தொடர்பான பதிவொன்றில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இதே பொருளில் தான் தோகாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் வளரும் நாடுகளின் பொருளாதார மாநாடும் தீவிரமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது மேற்கு காலனியாதிக்க மனோபாவத்தை சிறிதளவாவது அசைத்துப்பார்த்தது.

வார இறுதிகளில் தனியாக அமர்ந்து காபிக் கடையில் இரண்டு பெரிய காபியோடு நாளிதழின் கூடுதல் பக்கங்களைப் பார்ப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.அதுவும் டவுன்சுவில் மாதிரியான சிறு நகரத்தில்...கிராமப்புறங்களின் கவ் கேர்ள்ஸை பார்த்துக் கொண்டு, காபி குடித்துக் கொண்டே நாளிதழ்களை வாசிப்பது சுகமான ஒரு பொழுதுபோக்கு தான். கடந்த வாரம் "தி ஆஸ்திரேலியன்" ஒட்டிதழான் இன்கொயரர்ல் ஒரு புத்தகத்தின் விமரிசனம் படித்தேன். மிகவும் கவர்ந்துவிட்டது, விலை மலிவுதான் என்றாலும் இம்மாத வரவுசெலவில் அதற்கு அனுமதியில்லை என்பதால் இப்போதைக்கு விமரிசனத்தைப் படித்ததை வைத்தே திருப்தியடந்து கொண்டேன்.அது David Rothkopf's "Superclass: The Global Power Elite and the World They Are Making". அவர் இப்புத்தகத்தில் உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக் கூடிய சக்தி வாய்ந்த தனி நபர்களைப் பற்றியும் அவர்களது அரசியல் செல்வாக்கினால் அவர்கள் எவ்வாறு மொனோபாலியாக அவர்களது துறையை தத்தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதைப் பற்றியே. சில தொழிலதிபர்கள் சில நாடுகளின் மொத்த பொருளாதாரத்தையும் கையில் வைத்திருக்கிறார்கள் என்பது வியக்கத்தக்க ஒன்று. அத்தோடு உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50% எக்ஸான் மொபில் நிறுவனத்தினர் வைத்திருக்கின்றனர் என்பதும், அவர்கள் நிர்ணயிக்கும் விலைதான் உலகின் எந்தவொரு நாடும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது வரையறுக்கப்படாத உண்மை. 2004ல் 80 செண்ட்/லி ஆக இருந்த பெட் ரோல் இன்று ஆஸி $ 1.60 ஆக இருப்பது அவர்களால் தானோவென எண்ண் வைக்கின்றது.


19ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியில் எவ்வாறு வர்க்கப் புரட்சி ஏற்பட்டு கம்யூனிஸத்துக்கு வழி வகுத்ததோ, அதே போல் தான் இன்றைய உலக நாடுகளும் உள்ளன.எதையுமே ஒரு தனிப்பட்ட மனிதரால் ஒரேடியாகக் கட்டுப்படுத்தமுடியாத நிலையில் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயிக்கின்ற ஒற்றை முதலாளித்துவப் போக்கை ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளும் எதிர்க்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தன்னைக் கம்மூனிஸ்டுகளாக அறிவித்துக் கொள்ள வேண்டும். என்ன அன்று தொழில் புரட்சியால் ஏற்பட்ட தொழிலாளர் வர்க்கப் புரட்சியாக இல்லாமல் கொஞ்சம் மித தன்மையான உலகின் ஒட்டுமொத்த குடிகளின் பெரும்பாண்மை அங்கமான நடுத்தரவர்க்கத்தினரை திருப்திபடுத்த ஒவ்வொரு குடியரசும் கடமைப்பட்டுள்ளது. அவ்வகையில் அவர்களால் கம்யூனிச புரட்சியை வெளிப்படையாக செய்ய முடியாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் தனது குடிகளை திருப்திப்படுத்த அவர்களும் கம்யூனிஸ கொள்கைகளைக் கையாண்டு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

4/13/2008

பா. சிவக்குமாரின் புதிய முயற்சியும் அதற்கான வாழ்த்துக்களும்

இணையத்தில் பலருக்குப் பரிச்சயமான முகம் என சொல்லமுடியாவிட்டாலும் பலருக்குப் பரிச்சயமான பெயர் என்று கூறுவதில் முரண் எதுவும் இருக்கமுடியாத பெயர் இயக்குநர் பா.சிவக்குமார். பாரம்பரியமிக்க செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தாலும் தன் தனிப்பட்ட ஆர்வத்தினாலும் முயற்சியினாலும் அவர் அடைந்த உயரங்கள் எண்ணிலடங்கா. அவர் தனிப்பட்ட முறையில் இயக்கிய குறும்படங்களும் சரி, லீனா மணிமேகலையுடன் இணைந்து பணியாற்றிய குறும்படங்களும் சரி, குறைந்தபட்சம் குடியரசுத் தலைவரின் விருதையாவதுப் பெற்றிருக்கின்றன. அதையெல்லாம் விட அவருடையப் குறும்படங்கள் சமூகத்தின் பிரச்சினைகளையும் சமூகத்தில் தனிப்பட்ட ஒருவரால் பரீட்சிக்கப்படும் முயற்சி எவ்வாறு சமூகத்தை மேம்படுத்த முடியும் என்னும் ஒரு சிறு புள்ளியிலேயே தொடங்கும் எளிதில் புரிந்துக் கொள்ளக்கூடிய குறும்படங்களாகும்.

அவருடைய குறும்படங்கள்

1. ஆயிஷா
2.உருமாற்றம்
3.வெள்ளைப்பூனை

உருவாக்கத்தில் இருக்கும் திரைப்படம்

1.செல்லம்மா

அனிமேஷன் குறும்படம்

1)த பவர் ஆஃப் சைலன்ஸ்

அண்ணன் சிவக்குமாரும் அவரது நண்பர்களும் இணைந்து தற்போது இன்னுமொரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அது தான் இணையத்தின் முதல் சித்திர இதழ். இதுவரை அவருடைய முயற்சி அனைத்தும் வெற்றியடைந்தே வந்துள்ளது அந்த வகையில் இப்புதிய முயற்சியும் வெற்றியடைய எம்முடைய வாழ்த்துக்கள்.


தமிழின் முதல் இணைய சித்திர (காமிக்) இதழுக்கு இங்கே சொடுக்கவும்.

11/24/2007

AUS ELECTIONS - 07 (21:10 AEST)

ஆட்சியமைக்க 76 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில், தற்போதைய முண்ணனி நிலவரங்கள்:-

Australian Labour Party -75
Liberal Coalitions --------48
Independents------------2
Undecided---------------22(western Australia)

பிரதம அமைச்சரின் தொகுதியான Bennelong ல் இழுபறியான நிலையில் இருக்கிறது. 55% சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஜான் ஹோவர்ட் 7% பின் தங்கியுள்ளார். இவர் இத்தேர்தலில் இவரது தொகுதியை இழக்கும் பட்சத்தில் 1929க்கு பிறகு பதவியில் இருக்கும்பொழுதே தோற்கடிக்கப்பட்ட முதல் பிரதமர் ஆவார்.

*****
அவுஸ்திரேலிய உழைப்பாளர் கட்சி (ALP) , Kevin Rudd தலைமையில் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகிறது.

AUS ELECTIONS - 07

தற்போதைய நிலவரப்படி, சராசரியாக 12% ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் முன்னணி நிலவரம்...

Labours - 53
Liberal coalitions - 32
Independent - 1
Undecided-22

பிரதமரும், ஜார்ஜ் புஷ்ஷின் " குளோனிங்" குமான ஜான் ஹொவர்ட் 7% எண்ணிக்கையில் பின் தங்கி உள்ளார்.(Bennelong constituency)

10/18/2007

பரிணாம வளர்ச்சி


மேலே படத்திலிருப்பவை, மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பதை செயற்பூர்வமாக நிரூபிக்கும் இந்து நம்பிக்கையில் தலையை முங்கிக் கொண்டிருக்கும் இந்திய மனிதக் குரங்குகள். இக்குரங்குகள் நல்ல பணியிலும் இருக்கலாம் இல்லை ரயில்களில் திருடும் கூட்டத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் நாளை வெளிநாடுகளில் "coloured" இந்தியன் எவனாவது களவாடி மாட்டினாலோ இல்லை பாலியல் பலாத்காரம் செய்து அயல்நாட்டுக் காவல்துறையினரிடமோ மாட்டினாலோ "RACISM" என்று இதே மனிதக் குரங்குகள் தான் டீக்கடை முக்குகளில் கதைத்துக் கொண்டிருக்கும்.

***

இப்படி ஒரு நிகழ்வே வதோதராவில் நடக்கவில்லை என சப்பைக்கட்டிய பிசிசிஐ
மும்பையில் ஆதாரத்துடன் படம் பிடித்துப் போட்டவுடன் நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பணம் செலவு செய்து லாபம் சம்பாரிக்கும் பிசிசிஐ இம்மாதிரியான எச்சக்கலைத்தனமான் நிகழ்வுகளைக் கண்காணிக்க ஒரு பாதுகாவலர் குழு அமைத்தாலென்ன? அது முடியாவிட்டாலும் பரவாயில்லை, இம்மாதிரியான செய்கைகள் தவறு...மீறிச் செய்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தல் விளம்பரமாவது செய்யலாம்...

2005ல் தென்னாப்பிரிக்க வீரர்களைக் கேலி செய்த ஒருவர் இனி ஆயுட்காலம் முழுக்க எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் மைதானத்தில் அமர்ந்து பார்க்க முடியாது எனவும், சில வாரகாலம் கவுன்சிலில் கம்யூனிட்டி சர்வீஸும் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்ட அவுசுதிரேலிய் உதாரணங்கள் உள்ளது.

*****
என்னைத் தடை செய்யத் தேவையில்லை...நான் கற்றுக்கொண்டுவருகிறேன் என வாய்ப்பேச்சு வீரன் சாந்தகுமாரன் சீரிசாந்த், கடவுள் துணையிருந்தால் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லுவோம் என சொல்லியிருக்கிறான். இவன் நிச்சயமாக செல்லாங்குப்பம் அல்லது சோனாங்குப்பம் போன்ற ஊர்களில் பத்து பேர் கூடி இந்த வாரம் சனிக்கிழமை பாய்கொள்ளில பால் மேட்ச் ஆடுவோம் என்ற நிலையில் இருந்து நேரடியாக இந்திய தேசிய அணியில் பங்கு கொண்டிருக்க மாட்டான். க்ள்ப் கிரிக்கெட் தொடங்கி தேசிய லீக் அணிகளில் விளையாடும் முதல் தர வீரனாய் தான் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பான். அப்படியிருக்கும் நிலையில் அவனது செய்கைகளில் "aggression" இல்லை, பதினைந்து வயதில் பாய் கொள்ளியில் விளையாடிய என்னைப் போன்று தான் அகில உலகப் போட்டிகளில் ஆடிவருகிறான்.

****
யார் செய்த புண்ணியமோ? தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்ற நிலையில் மூக்குக்கு வந்தது பல்லோடு என்ற கணக்காய் நாமும் இங்கு "ரிசர்வ்" க்ரேடில் க்ளப் கிரிக்கெட் ஆடி வருகிறோம். அத்தோடு பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சி உதவியாளனாகவும் இருக்கிறோம். பயிற்சியாளருக்கு ஒரு பட்டறையும் உண்டு...அதில் இவ்வயது வீரர்களுக்கு அவர்கள் விளையாடுவது வெறும் விளையாட்டு தான். வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல அன்றைய தினத்தை மகிழ்ச்சியோடு செலவழித்தார்களா என்பது தான் முக்கியம். அதை அவர்களுக்கு எடுத்து சொல்லவும், அவர்களோ அல்லது அவர்கள் முன் நாமோ " fuck" " shit" "bastard" போன்ற வார்த்தைகளைத் தப்பித் தவறிக் கூட உபயோகிக்கக் கூடாது எனவும் சொல்லித் தருகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆட்டம் தொடங்கும் பொழுதும், முடியும் பொழுதும் இரு அணியின் சிறார்களும் வரிசையில் நின்று ஒருவரை ஒருவர் வாழ்த்தியும் நன்றி சொல்லியும் வரவேண்டும். இது மாதிரியெல்லாம் கூட அகில உலகப் போட்டிகளில் ஆடும் கத்துக்குட்டி சாந்தகுமாரன் சிறீசாந்தனுக்கு எந்த பேமானியும் சொல்லித் தரவில்லை என்றாலும் குறைந்தபட்சம் போட்டி முடிந்த பிறகு கைக்கொடுக்கும் பழக்கத்தினையாவது எந்த மூத்த(ர) விளையாட்டு வீரராவது சொல்லிக் கொடுக்கலாம். இல்லையென்றால் MCGல் அவன் வீசும் பந்து ஒவ்வொன்றும் கொச்சினில் "Back waters" ல் தான் வந்து விழும்.

வந்து வாங்கிக் கட்டிகிட்டு போங்கடா பிள்ளக்கா பசங்களா...

10/12/2007

உலகின் முதல் " குற்றவாளிகள் திருத்தும் மையம்"

சிறைச்சாலைகள் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் பள்ளிகளாக இருக்கவேண்டுமேயொழிய அவர்களை மென்மேலும் முட்டாளாக்கி, மூடனாக்கி, மனநோயாளியாக்கி, சமூகத்தின் மேல் மென்மேலும் கோபத்தை உண்டாக்கும் தண்டனை நிலையலங்களாக இருக்கக்கூடாது என்பதே மனிதனாகப் பிறந்த ஒருவனின் நேர்மையான எண்ணமாக இருக்கமுடியும். சமீபத்தில் தமிழக அரசு சிறைச்சாலைகளில் இறைச்சி உணவை சேர்த்தது கூட பலராலும் எள்ளி நகையாடப்பட்டது. இதைவிடக்கொடுமையான விடயம் என்னவென்றால், இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டின் ஏதோ ஒரு சிறைச்சாலையில் இறைச்சியுணவு வேண்டி கைதி ஒருவர் மரத்தின் மீதமர்ந்து போராட்டம் நடத்தியதாக ஊடகங்களில் படித்தோம்.

அக்காலம் தொட்டே கட்டிடக்கலைதான் அனைத்துக்கலைகளுக்கும் முன்னோடியாகவும் பலவித பரிணாமங்கங்களையும் வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் காட்டியுள்ளது. அத்தோடு பல சமூக அரசியல் மாற்றங்களையும் கட்டிடக்கலை கொண்டுவந்துள்ளது. அதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் நீங்கள கீழே பார்க்கும் சிறைச்சாலை. இது ஆஸ்திரியாவின் லியோபென் நீதித்துறை நிலையத்தின் குற்றவாளிகள் திருத்தகம். இது கடந்த வாரத்தில் கட்டிடக்கலை நிபுணர்களின் பல்வேறுவகையான விமரிசனத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால் இம்மாதிரியான 5 நட்சத்திர விடுதியைப்போன்ற சிறைச்சாலையும் இவ்வுலகில் உள்ளது. அபூ காரிப் சிறையும் உள்ளது...குவாந்தனாமோ வளைகுடாவின் தீவிரவாதிகள் கைகால்களைக் கட்டிப்போடும் சிறைச்சாலைகளும் உள்ளது. இனியாவது ஏகாதிபத்திய அரசுகள் படிப்பினைக் கற்றுக் கொள்ளுமென நம்புவோம்.










மேலும் படம் பார்க்க...

10/09/2007

தோழர் தமிழச்சிக்கு எனது கண்டனங்கள்

ஒரு மாதமாக ர் மேய்ந்துக் கொண்டிருந்த பகல் கோட்டானை எழுப்பி ஒரு கிளாஸ் ச்சார்டனேயும், கங்காரு ஸ்கூவர்சும் கொடுததில் உற்சாகமாகிப் போனவன் மடமடவென்று கொட்டியது இப்போது பேப்பரில்...மன்னிக்கவும் பதிவில்...

தமிழச்சி சில வாரங்களாக அய்ரோப்பாவில் வேட்டையாடிக் கொண்டிருந்த பகல் கோட்டானிடம் அடிக்கடி கதைத்ததாகவும் அதில் தோழர் தமிழச்சி பதிந்து வைத்திருந்த பல தொலைப்பேசி ஒலிக் கோப்புகளை கேட்டதாகவும் சொன்னான். அது மட்டுமல்லாமல் சாதாரணமாகப் பேசும் பொழுது எகிறிய ஈழத்துச் சகோதரி ஒருவரிடம் அவருடைய தொலைப்பேசி உரையாடல் பதிவு செய்யப்படுகிறது என்றுச் சொல்லியவுடன் பப்பரப்பரபபப்பர....என்று பம்மியது சரியானத் தமிழ்த் திரையுலகக் காமெடி என்றும் சொன்னான். அது மட்டுமா...தான் செருமனியிலிந்து பேசுவதாகக் கூறிக் கொண்ட ஈழத்துத் தமிழில் கதைக்கும் ஒரு நாதாறி சிரித்துக் கொண்டே "நாளைக்கு நீங்கள் இறந்துவிட்டால் கூட இயக்கத்தினர் தான் காரணம்" என்று தமிழச்சியிடம் சற்று கூட பதட்டமில்லாமல் கூறியது அவன் எதற்கும் துணிந்தவன் என்பதாக இருந்தது என்றும் கூறினான்.

சற்றே ஆசுவாசமான நான், டேய் பகல் கோட்டான்...நீ இப்பிடி பேசினா வேலைக்காவது...நம்ம சென்னைத் தமிழ்ல கொஞ்சம் கதைன்னு" கொளுத்திப்போட்டேன்.

தோடான்னு தொடங்கினவன்...

மாமு, புலி எயக்கம் ...எலி எயக்கம்னு எதும் தெரியாது அந்த புள்ளைக்கு...அது பாட்டுக்கு ஏதோ அதுக்குத் தெரிஞ்சது படிச்சதுன்னு பொஸ்தகத்த பாத்துக்கினு டைப்பினுக்கீது...எகோல்ல இருக்க தமிழ்தோட்டத்தப் பத்தி ஒரு பதிவு போட்டது தான் இப்போ ப்ரச்சனையே...அதோடக் கூட ப்ரான்சில இருக்க இன்னொரு ஈழத்து கயித இன்னா சொல்லிக்குதுன்னா அய்ரோப்பா பெரியார் விழிப்புணர்வு எயக்கம் எத்த செஞ்சாலும் அந்த டாபர்ட்ட சொல்ட்டுதான் செய்னும்னு சொல்லிக்குது. இந்தப் புள்ள கொஞ்சம் நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கறது போல...அதெல்லாம் முடியாது...நீ வேணா வா...ஒத்துமையா விழிப்பொணர்வ வளக்கலாம்னு சொல்லிக்குது...அது கூட இல்ல மாமு ப்ரச்சினையே...பப்ளிக் பூத்துலர்ந்து பேசிய ஒரு பொறம்போக்கு ப்ரெஞ்சிலேயே பேசனாலும்...கொண்டைய மறைக்காம அப்பப்போ சிறீலங்காத் தமிழ்லயும் பேசிக்குது....அத்தோடக் காண்டி வுடசொல்லாம இயக்கத்த அனுசரிச்சிக்கோ நாங்களே ஒன்னிய நாய் மாதிரி காவலுக்கு நின்னு பாத்துக்கறோம்னு சொல்லிட்டு சில ஆக்களோட பேர சொல்லி அவனுங்க எயக்கத்துக்கு எதிரானவன் அவங்கிட்ட பேசாத...அப்பிடி இப்பிடி சொல்லிட்டு அதே நாய் தான் சத்தியக்கடதாசியோட ஒரு பதிவு லிங்க் போட்டு டபாச்சிக்குது...

அது சரி கோட்டான், நம்ம சபேசன் அய்யா புச்சா எதோ எயக்கம் ஆரம்பிச்சிக்கராறே என்னா மேட்டரு...இது நானு...

மாமு...சப்பேசனும் கொஞ்ச நாளா அப்புடி இப்புடின்ன்னு அந்த புள்ளகிட்ட பேசி பாத்தார். அந்த் பொண்ணு ஸ்ரிக்டா இருந்தது...அதுமில்லாம அந்த புள்ளகிட்ட வீரமணி அய்யா, தோழர் கொளத்தூர் மணி, முக மகள் தோழர் கனிமொழி மாதீரி ஆளுங்கலாம் பெர்சனலா பேசிக்கிராங்க. அது புடிக்காத இந்த சப்பேசனு நேத்து ஏதோ ஒரு எயக்கத்தத் தொடங்கி இன்னிக்கு அறிக்க மயீரு மண்ணாங்கட்டின்னு உட்டுக்கிறார்.

ஏண்டா அவரு தான் ஈழத்துல தலித் என்ற சொல்லாடலே கெடியாதே..அப்டீன்னேன்...

மாமு...இன்னா நீ இப்புடி புரியாம பேசினுக்கீற...அவரு தலித்துன்னு தான் கூப்ட மாட்டோம் பறயன், பள்ளன், கள்ளன்...தீவுக்காரன்...அப்டில்லாம் கூப்டமாட்டோம்னு சொன்னாரா? நீ ஒன்னுகெடக்க ஒன்னு கேட்டு பேஜார் பன்றீயே...

அப்போ தமிழச்சி சிறீலங்கா ரேசிஸ்டு கவர்மேண்டுக்கிட்ட பொட்'டீ" வாங்கிட்டாங்கன்னு சொல்றீயா...

ஆமா...டக்ளஸ் தேவானந்தா பாரீசுக்கு வந்ததே தமிழச்சி கையில் மில்லியன் டொலர் பொட்"டீ" கொடுத்து அழுக்குண்ணி வினாயகன் ஊர்வலத்துல நோட்டீசு கொடுக்க சொன்னாராம். அத ஏதோ ஒரு ராவுக்கழுகு மூலமா நேத்து தான் கண்டுபுச்ச சப்பேசண்ணா அத்த அவரா வெளில சொன்னா எடுபடாதுன்னிட்டு ஏதோ ஒரு எயக்கம் நேத்து ஆரம்பிச்சு அத்தோட மூலமா அறிக்கைன்னூ படா பேஜாரா எடுத்து வுட்டாருல்ல. இனி தமிழச்சி ..ப்ரெஞ்ச்சி தான்...

அது சரி அதுக்கு ஏண்டா நீ சோகமாயிருக்க...

பின்ன என்னா மாமு...ஒரு மில்லியன் டாலரு பொட்"டீ" வாங்கிக்கிறாங்க...எனுக்கு ஒரு டாலரு கூட கொடுக்கலின்னா ...என்னாத்து கண்ட பொறம்போக்கு தமிழனுங்க பேசனதெல்லாம் எங்கிட்ட போட்டு காட்டனாங்க...அதான் ஒரே அழுவாச்சி....

அது சரி...பகல் கோட்டானுக்கு பங்கு கொடுக்காத தோழர் தமிழச்சிக்கு எமது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

சபேசண்ணா ஒங்க எயக்கத்தோட பெரியார் கருத்துப்பரப்பும் பணி சூப்பர்ணா...ஒங்க குண்டில நீங்களே தலைய வுட்டுக்கோங்கணா...

10/06/2007

Me, Myself, Ram setu & SSPC

2000-2001ல் இதே டி ஆர் பாலு தான் மத்திய தரை மற்றும் நீர்வழித்துறை போக்குவரத்துத் துறை அமைச்சர். அடிக்கடி பரபரப்பான அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருப்பார்... கடலூரிலுருந்து
மாமல்லபுரத்துக்கு மரக்காணம் வழியாகப் படகுப் போக்குவரத்து...தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்து...அதுவும் வெறும் 600 ரூபாயில்...சேது சமுத்திரத் திட்டத்திற்கான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு... அது இது என்று தூள் பரத்திக் கொண்டிருந்தவர் ஒரு வழியாக 2006-07ல் உருப்படியாக சேது சமுத்திர திட்டத்திற்கான செயல் வடிவம் வெறும் வெத்து அறிக்கையாய் இல்லாமல் செயல்பட ஆரம்பித்தது. ஆரம்பித்தவுடன், இன்று தனது இரு புடுக்குகளும் வாய் வழியாக வெளிவருமளவிற்கு துள்ளி குதிக்கும் அத்துவானி & வானர கம்பேனி அன்று தங்களால் தான் இத்திட்டமும் அதன் ஆய்வும் உருப்பெற்றதாகக் கூறிக்கொண்டனர். அதுவாவது பரவாயில்லை இந்த ஆய் ஆத்திமுக்க(அ இ அ தி மு க) சேது கொண்ட தலைவியே என போஸ்டரெல்லாம் அடித்து ஒட்டிக் கொண்டார்...ஊரை அடித்து உடன்பிறவா சகோதரி உலையில் போட்டவர். வெக்கங்கெட்ட மானங்கெட்ட தறிகெட்ட சோற்றில் தொண்டர்களின் மூத்திரத்தை பிணைந்து திண்ணும் இனமிகு மானமிகு தலைவர் பொய்க்கோ, இத்திட்டம் தன்னால் தான் உருப்பெற்றது ஆனால் தன்னை மதிக்கவில்லையென புது மாப்பிள்ளை முறுக்கோடு அவரும் போஸ்டர் அடித்துக் கொண்டார். அவர் அடித்துக் கொள்ளலாம் அதற்கு முழுத்தகுதியும் உள்ளது. ஏனென்றால் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் நானும் கடைசி வருட தீஸிசுக்காக ஓஷனேரியம் பண்ணலாமென்று ஒரு ஏகாதிபத்திய நினைப்பில் இண்டெர்னெட்டில் புகுந்து மேற்கூறிய அறிக்கைகளையும்
அறிவிக்கைகளையும் சகட்டுமேனிக்கு கரைத்துக் குடித்திருந்தேன். அப்போதெல்லாம் சேது சமுத்திர காலவாய் திட்டம் என ஆங்கிலத்தில் கூகிளோ இல்லை ஆஸ்க் ஜீவ்ஸ்லயோ அல்லது அல்டாவிஸ்டாவிலேயோ போட்டால் முதன் முதலில் வந்தது வை. கோபாலசாமியின் மேலவை உரைதான். அதில் எப்போது சேது சமுத்திர கால்வாய் திட்டமும் இருக்கும். ஆனால் இதன் முதல் வரைவை முன்வைத்தது வெள்ளைக்காரத் தளபதியான ஏ டி டேய்லர் தான்(1860). அதன் பின்னர் 1955ல் சர். இராமசாமி முதலியாரவர்கள் சுதந்திர இந்தியாவில் சேது சமுத்திர கால்வாய் திட்டப்பணிக்கான ஆய்வினை தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தோடு இணைத்து அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்தார்கள். ஆனாலும் சேது திட்டத்தை தொடாமல் தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தை மட்டும் நிறைவேற்றினார்கள். அதன் பின்னர் காமராசர் ஆட்சியில் தூசு தட்டப்பட்டு
தோராயமாக 9.5 கோடியில் முடிக்கலாம் என திட்டம் வகுத்தனர். ஆனாலும் நிறைவேற்றமுடியாமல் போனது. அப்படியே அவன் போய் இவன் போய் கடைசியாக கலைஞர் வந்து ஒரு வழியாக இத்திட்டத்தை துவக்கினர். இது நல்ல திட்டம் தான் என்றாலும்...இன்னும் சற்று ஆராய்ந்து அந்த சுண்ணாம்புப் பாறைகளைக் குடைந்திருக்கலாம் இல்லையென்றால் கண்ட கறப்போக்கு பொறம்போக்குகளும் இன்று புடுக்குகள் வாய் வழியாக வெளியே வருமளவிற்கு குதித்திருக்காது. டிரெட்ஜரும் பழுந்தடைந்திருக்காது.

இத்திட்டத்திற்கு சிறீலங்கா அரசானது அன்றிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. அதற்கு காரணம், இன்று இந்தியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பும் கப்பல்கள் மும்பைக்கோ அல்லது மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டுமானாலும் கூட கொழும்பு சென்று சிறீலங்காவை ஒரு சுற்று சுற்றித் தான் வரவேண்டும்.அது மட்டுமல்லாமல் டிரான்ஸிட் போர்ட் எனப்படும் சரக்கு தேக்கிகளும் ஒட்டுமொத்தமாகக் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு மாறும். அப்படி மாறும்பட்சத்தில் தற்போது விமான போக்குவரத்தில் சிங்கப்பூர் எவ்விதமான முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ அதே வகையான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்
கொழும்பு துறைமுகம் அதிலிருந்து தடாலடியாக மாறும். உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து ஆப்பிரிக்காவிற்கோ அல்லது அய்ரோப்பாவிற்கோ செல்லும் சரக்கு கப்பலானது தனது சரக்கை கொழும்பில் இறக்கி வைத்து கொழும்பில் ஏற்கனவே இறக்கிவைக்கப்பட்டு சிங்கப்பூருக்கோ அல்லது இன்னபிற பசிபிக் நாடுகளுக்கோ மாற்றிச் செல்லத் தயாராக இருக்கும் சரக்கினை ஏற்றிக்கொண்டுத் திரும்பிவிடும். ஆக அங்கே தேக்கிவைக்கப்பட்டிருக்கும்
கண்டெயினர்களுக்கோ அல்லது இன்னபிற கனிமங்களுக்கான நாள் வாடகை நூற்றுக்கணக்கான டொலர்கள் ஒரு கண்டெயினர்/ ஒரு டன் என்ற அளவில். இது அப்படியே தூத்துக்குடி துறைமுகத்திற்கு மாறும் நிலை ஏற்படும். இதனால் சிறீலங்காவின் சிங்களப்பேரினவாத அரசுக்குப் பலகோடி மில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்படும். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் சேது சமுத்திரத் திட்டம் ஆய்விலிருந்த 1999-2004 காலகட்டத்தில் அப்போதைய இலங்கையின் பிரதமமந்திரியான இரணில் விக்கிரமசிங்க கூட அப்போதைய தமிழக முதல்வரையும், மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவையும், ஜார்ஜ் பெர்ணாண்டஸையும் சந்தித்து இலங்கைக்கும் இராமேசுவரத்திற்கும் பாலம்
அமைத்தால் இரு நாடுகளுக்கான பொருளாதார ஒத்துழைப்பும் நல்லுறவும் மேம்படுமென ஒரு அரைவேக்காட்டுத்தனமான வாதத்தை முன்வைத்தார். அதை அப்படியே விடுவோம்,
அதைக் கதைப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆதாம் பாலம் எனப்படும், சுண்ணாம்பு மற்றும் மணல் திட்டுக்களை இடிப்பதாலும் எவ்வளவு ஆழம் இடித்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் தற்போது பார்ப்போம்.

இந்திய நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சம் வெளிப்படையாகத் தெரிவித்த வரையில் 31 அடி ஆழம் வரைத் தோண்டப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 30,000 கன எடை கொள்ளளவு கொண்ட கப்பல்கள் மட்டுமே பயனிக்கமுடியும். இதையே இன்னுமொரு 12 அடிகள் அதிகமாகத் தோண்டினால் 60,000 டன் கொள்ளளவு கொண்ட கப்பல்களும் பயனிக்க முடியும். இதில் 30,000 டன் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் பெரும்பாலும் கண்டெயினர் கப்பல்களாகத்தான் இருக்கமுடியுமேயொழிய கனிமங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சிறிதளவே இருக்கும்.கனிமங்கள் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் பெரும்பாலும் 60,000டன் கொள்ளளவு கொண்டவை. ஆனால் ஒட்டுமொத்தமாக பதினேழு மீட்டர்கள், அதாவது தோராயமாக 55அடிகள் ஆதாம் திட்டுக்கள் இருக்கும் பகுதிகளை ஆழப்படுத்தினால் 1லட்சத்து 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் அனாயசமாக செல்லமுடியும். மேலும் இந்தக் கப்பல்கள் அதிகபட்சமாக 15 -17 நாட்டிகல் மைல் வேகத்தில் தான் பயனஞ்செய்யும். இவை கொழும்பை அடைவதற்கு 15-17 நாட்டிகல் மைல் வேகத்தில் பயணஞ்செய்தால் சேது கால்வாயில்
13-15 நாட்டிகல் மைல் அளவிலான வேகத்தில் பயனஞ்செய்யும். இதனால் பல மில்லியன் டொலர்கள் எரிபொருளும், பலமணி நேர பயண நேரமும் குறையும். இதை எவரும் தெளிவாகவோ அல்லது துல்லியமாகவோ எதிர்தரப்பிலிருந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்காத பட்சத்தில் ரீடிஃப் அல்லது மற்ற அய்யர்கள், வாரியார்கள், ஜேக்கப்களின் ஆய்வுக்கட்டுரையை நம்புவது எள்ளளவும் பயனில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் பேணிக்காக்கவேண்டுமென ஒரு சதவிகிதம் கூட நம்பிக்கையோ அல்லது அதற்கானடி கட்டமைப்புகளோ அறவே இல்லை. எம் எஸ் சுவாமினாதன் அவர்களின் மன்னார் வளைகுடா பையோஸ்பியர் கன்ஸர்வேசன் குழு இதுவரைக்கும் எவ்விதமான திட்டங்களை முன்வைத்துள்ளது. சுற்றுச்சூழலை பேணிக்காக்கவேண்டுமென்றால் வேட்டையாடுதல் எனப்படும் மீன்பிடித் தொழில் அறவே ஒழிக்கப்படவேண்டும். அது மேற்குறிப்பிட்ட மன்னார் வளைகுடாவில் சாத்தியமில்லை. மேலும் சேது திட்டத்தினால் இடிபடப் போவது ஆதாம் மணல் திட்டுக்கள்தானேயொழிய தூத்துக்குடி ச்தொடங்கி இராமேசுவரம் வரையிலான் இருபதுக்கும் மேற்பட்ட ஆளரவமற்ற தீவுகள் கிடையாது. மேலும் பாதுக்காப்பு என்னும் பெயரில் வேட்டையை நடத்துவது மிகவும் மொள்ளமாரித்தனம். 1960களிலேயே மன்னார்வளைகுடாவின் பல உயிரிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. அதிலும் டைன்மைட் பயன்படுத்தி வேட்டையாடும் முறையினால் இக்கடற்கரையோரத்தில் உயிரிகள் முழுதுமாக அழிந்துவிட்டதென்பது நிதர்சனமான உண்மை அதனால் சும்மா பெயருக்காக சுற்றுச்சூழல் என்ற பெயரில் உப்புமா கிண்டி இத்திட்டத்தை தள்ளிப் போடுவது (ஆம்... இத்திட்டத்தை நிறுத்த விஷ்னூ பகவான் மீனையோ அல்லது பூனையையோ புணர்ந்து இராம் அல்லது சாம் என்ற அவதாரத்தை எடுத்தாலும் நிறுத்த முடியாது) ஒரு தற்காலிகமான செயல் தான்.

வாழ்க இராம் சேட்டு. அவர்தம் காவிப்படையின் புடுக்கறுத்து புடுக்குக்கறி, சாராயம், சுருட்டு வைத்து படையலிட்டு உடைப்போம் ஆதாம் மணல் திட்டுக்களை...

சில பயனுள்ள தகவல் களஞ்சியங்கள்

1. EPW Paper on SSPC
2. Mannar Gulf Flora & Fauna
3. உருப்படாததின் உருப்பெறாத உப்பற்ற உப்புமா

9/24/2007

குடுமி மறைத்து வந்தாலும் குறி அறுக்கப்படும்



இவனைத் தெரிகிறதா? தினமலமும் இன்னபிற பார்ப்பன குசு உண்டவர்களுக்கு இவனது முகம் ஞாபகம் இருக்கிறதா? இவனைப்போன்று இன்னும் எத்தனை முகங்கள் வெளியே வராமல் வெட்டிச்சாய்க்கப்பட்டதோ?

இன்று ஒரு டிரெயிலருக்கே நீலிக்கண்ணீர் வடிக்கும் பார்ப்பன மற்றும் இந்துத்துவவியாதிகளே...நீங்கள் அங்கே குசராத்தில் நிறைவேற்றியதைவிடவா இன்று தமிழகத்தில் நடந்துவிட்டது? தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்றுக் கூவிக் கொண்டே வடனாட்டில் அமர்ந்திரு...இங்கே வந்தால் டவுசரோடு குறியும் உருவப்படும்.

சில்வியா குண்டலகேசி alias கேத்தரின் பழனியம்மாள்....



300% மொக்கையே தான்...

9/07/2007

ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசன் - 2007






ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசன் என அழைக்கப்படும் APEC - 2007 அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் படோபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல போர் குற்றங்களுக்குக்
காரணமானவனும் அவனுக்கு விளக்குபிடித்தவர்களும் இன்னபிற அல்லக்கைகளும் சேர்ந்து கும்மியடிக்கின்ற கார்ப்பொரேட் திருவிழா தான் இந்த APEC என்னும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு என்றழைக்கப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசனின் திருவிழா இவ்வருடத்தின் சனவரி மாதமே ஆரம்பித்துவிட்டிருந்தாலும், அதன் நிறைவு விழா இவ்வாரம் தான். உலகின் மிகப் பெரிய கேடியான அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ்சும் அவனுடைய அவுஸ்திரலாசிய அல்லக்கையான ஜான் ஹோவர்டும் கூத்து கட்டும் வைபவமும் இவ்வார இறுதியில் தான் நடைபெருகிறது.

இந்த கூத்துகட்டும் வைபவத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு 275 மில்லியன் டொலர்கள் செலவு வேறு. அதுமட்டுமன்றி சனநாயக ரீதியிலான அமைதி? போராட்டத்துக்கும் நீதிமன்றங்கள் அனுமதி மறுத்து தீர்ப்பளித்துள்ளன.அது மட்டுமன்றி இந்த கூத்தின் உச்சகட்டமாக APEC laws என்று புதிதாக சட்டத்தையும் புகுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களின் மேல் காட்டுமிராண்டித்தனமாக சட்டத்தை ஏவி மிரட்டி வைத்துள்ளனர். 275 மில்லியன் டொலர்கள் செலவு செய்து இரு பாதுகாப்பு வளையங்கள், காணாத இடங்களில் ஸ்னைப்பர்கள் வேறு. ஆனால் இவர்கள் அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி அனைத்து செக்யூரிட்டிகளுக்கும் அல்வாவை வாயில்
ஊட்டி ஜார்ஜ் புஷ் தங்கியிருக்கும் ஓட்டலின் சில மீட்டர்களுக்கு அப்பால் வரை வந்துள்ளார் பின்லேடன். வந்தவர் ஆயுதம் ஏதும் பயன்படுத்தாமல் மிகவும் சனநாயக ரீதியில் வைத்தக் கோரிக்கைக்காக கைது செய்யப்ப்ட்டு இருக்கிறார். அவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அவர்கேட்ட கேள்வி இது தான்:

I am one of the important world leaders. Doesn't APEC have a seat for me?

:))

இந்த கூத்து ஒருபுறமிருந்தாலும், நமது கருப்பு பலாக் (Black Bloc) கலகக்காரர்கள் நாளை அவுசுதிரேலிய அரசாங்கத்தின் தடையை உடைத்து போராட்டம் நடத்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...ஏற்கனவே உலகமயமாக்கலைக் கண்டித்தும் உலகவங்கியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கடந்த வருடம் மெல்பர்ணில் கருப்பு கட்டமைப்புத் தோழர்கள் வெற்றிகரமாக கலகத்தை நிறைவேற்றினார்கல்.அதே போல் நாளையும் நமது குரலை உலகத்தின் கிரிமினலான ஜார்ஜ்புஷ்சையும் அவனது கைக்கூலி ஜான் ஹோவர்டையும் எதிர்த்து கலகத்தை நிறைவேற்ற வாழ்த்துகிறோம். கலகத்தின் முதற்கட்டமாக இன்று தக்காளி சாஸை போலிஸ்காரனின் மேல் பீச்சியடித்து முதல் கைதை அரங்கேற்றியிருக்கும்
சக தோழனுக்கு வாழ்த்துக்கள்.