12/24/2005

கேள்வி கேட்ட தருமிக்கு...

மூன்று வருடங்களாய்
நட்போடு உறவாடிய
நாங்கள்
மூன்றே மாதங்களில்
காதலில் கசந்து
இனி நீ, நான்
என இருப்போம் என்று
விடைபெற்ற அந்த
"pot-tea-shop" -ஐ
சொல்லவா

பெங்களுரில்
100 அடி -ஐ
மறு வடிவம் செய்ததால்
உருவான அந்த
"botique shop" - ஐ
சொல்லவா

ஒரு "தம்"
அடிக்க ஊரை விட்டு
வெளியே
ஆறு கல்
பயனம் செய்த
அந்த பொட்டிக்கடையை
சொல்லவா

தமிழ் சினிமாவின் வயது - 75*

"You ain't heard nothing yet" 1927-ல் வெளியான வார்னர் பிரதர்ஸின் 'தி ஜாஸ் ஸிங்கர்' படத்தில் நடிகர் அல்கோல்சன் பேசிய இந்த வரிதான் உலக சினிமாவின் முதல் குரல்!
இதற்கு நான்கு வருடங்கள் கழித்து 1931-ல் தமிழ்சினிமா தனது பலவருட மௌனத்தை களைந்து பேசத்துவங்கியது. முதல்படம் H.M. ரெட்டியின் 'காளிதாஸ்'. ஆக, 1931-ல் பேசத்துவங்கிய தமிழ்சினிமா தனது 75-வயது கொண்டாட்டத்தை துவக்கியிருக்கும் தருணம் இது. இந்த நேரத்தில் தமிழ்சினிமா- குறிப்பாக அதன் குரல் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று பார்ப்பது சாலப்பொருந்தும்.
மௌனப்படங்கள் காலத்தில் சினிமாவுக்கு மொழி கொடுத்தவர்கள் 'டாக்கி'கள். படம் திரையிடப்படும்பொழுது இந்த டாக்கிகள் திரை அருகில் நின்று உரத்த குரலில் காட்சிகளை அதன் செய்திகளை கதையின் பின்புலத்தை விளக்குவார்கள். உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட இந்தமுறைதான் தமிழிலிலும் நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில் 1926-ம் ஆண்டு ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ விட்டாபோன் முறையை அமுல்படுத்தியது. உரையாடல்கள் பெரிய தகடுகளில் (Discs) பதிவு செய்து பின்பு அவை திரையில் நடக்கும் காட்சிகளுக்கு ஏற்ப பொருத்தப்படுவதே விட்டாபோன் முறை. படப்பிடிப்பின்போதே மைக்கின் உதவியுடன் உரையாடல்களும், இசையும் பதிவு செய்யப்பட்டன.
தமிழின் முதல் பேசும்படம் 'காளிதாஸ்' இந்த முறையில்தான் உருவாக்கப்பட்டது. 1931-ல் விட்டாபோன் முறை வழக்கொழிந்தது.
"லீ டீ பாரஸ்ட்" என்ற அமெரிக்கர் ஒலியை நேரடியாக பிலிமில் பதிவு செய்யும் 'மூவிடோன்' முறையை இந்த வருடத்தில்தான் கண்டுபிடித்தார்.
'மூவிடோன்'னின் அடுத்தக்கட்ட வளர்ச்சி DAT டெக்னாலஜி. இது எட்டு ட்ராக்குகளை கொண்டது. ஒலி மிக துல்லியமாக DAT முறையில் பதிவு செய்யப்பட்டது.
பிறகு DAT, 2DAT -ஆக வளர்ச்சியடைந்தது. இதில் மொத்தம் பதினாறு ட்ராக்குகள். சினிமாவில் குரலை துல்லியப்படுத்த 2DAT டெக்னாலஜி பெரிதும் உதவியது. Computerised Unlimited Track Technology விரைவில் திரைப்படங்களில் பயன்படுத்தப்படவுள்ளது. இது உபயோகத்துக்கு வரும்போது சினிமா ஒலி தனது உச்சபட்ச துல்லியத்தை எட்டும். ஒலியை பதிவு செய்வதில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியுடன் சேர்ந்து ஒலியின் quality-யும் முன்னேற்றமடைந்தது.
ஆரம்பகாலக்கட்டத்தில் Mono-வாக இருந்த ஒலியின் தரம் டால்பி, டி.டி.எஸ். என்று குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை எட்டியது. Mono-வுக்கும் டால்பி, டி.டி.எஸ்.க்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதன் Base Frequency.
சரவுண்ட் சிஸ்டம் எனப்படும் DTS - ஒலி அமைப்பில் மூன்று சி.டி.க்களில் ஒலி பதிவு செய்யப்பட்டு திரைப்படத்துடன் ஓடவிடப்படும். சி.டி.க்களில் உள்ள code-ஐ புரொஜக்டர் read செய்தவுடன் System வேலை செய்யதுவங்கும். இந்தியாவிலேயே முதன்முதலில் டால்பி ஒலி அமைப்பில் தயாரான படம் கமலின் 'குருதிப்புனல்'. அது போல் DTS ஒலி அமைப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆபாவாணனின் 'கறுப்பு ரோஜா' படம். சினிமா ஒலி தொழில்நுட்பத்தில் தமிழ்சினிமவின் பங்கை விளக்கும் எளிய உதாரணங்கள் இவ்விரு திரைப்படங்கள்.
DTS-க்குஅடுத்தபடியாக SBBS என்ற ஹைடெக் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஹாலிவுட்டில் இது அறிமுகமான சில வருடங்களில் தமிழ்சினிமா இதனை சுவீகரித்துக்கொள்ளும் என்று நம்பலாம். லீ டி பாரஸ்ட் கண்டுபிடித்த மூவிடோன் முறையில் பிலிமின் ஒரு ஓரம் சவுண்ட் ட்ராக் இடம்பெற்றது.
தற்போது அறிமுகமாகியுள்ள சூப்பர் 35 எம்.எம். தொழில் நுட்பத்தில் சவுண்டுக்கு என தனி ட்ராக் ஏதுமின்றி பிலிமிலேயே இமேஜுடன் சேர்த்து ஒலி பதிவு செய்யப்படுகிறது. இதனால் பிலிம் இமேஜ் மட்டுமின்றி ஒலியும் அதன் உச்சபட்ச துல்லியத்தை எட்டமுடியும்.



செல்வராகவனின் 'புதுப்பேட்டை' மற்றும் கமலின் 'வேட்டையாடு விளையாடு' படங்கள் சூப்பர் 35 எம்.எம்.பிலிமில் தயாராகின்றன. ரெக்கார்டிங் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, ஹாலிவுட் சினிமாவுக்கான இசையை தன் சொந்த ஸ்டுடியோவிலேயே பதிவு செய்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
"அவரது ஸ்டுடியோவை போலவே பல ஹைடெக் ரெக்கார்டிங் தியேட்டர்களை தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்நாடு."
கதை திரைக்கதையில் உலகதரத்தில் ஒரு சினிமா தமிழில் உள்ளதா என்ற கேள்விக்கான பதில் தடுமாற்றத்துடன் வெளிவரலாம். ஆனால் ஒலி தொழில் நுட்பத்தில் உலகதரத்துக்கு இணையான வளர்ச்சியை அடைந்திருக்கிறது தமிழ்சினிமா. ஐந்து முதல்வர்கள் ஐயாயிரத்து ஐநூறுக்கும் மேல் திரைப்படங்கள் அளவிடமுடியாத மக்கள் நாயகர்கள்... தமிழ்சினிமாவின் இந்த 75 வருட சாதனைகளுடன் அதன் 'குரலை'யும் நாம் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்!
செய்தியை திருடியது இங்கே!

12/19/2005

இசை மாஃபியாவும், சில குறிப்புகளும்!

ஒரு முன் குறிப்பு:
மாஃபியா என்பது "ரகசிய குற்றங்கள் புரியும் ஒரு சிறு/பெரு" கூட்டத்தைக் குறிப்பது.இந்த கூட்டங்கள் ஐரோப்பிய வந்தேறிகளால் துவங்கப்பெற்றது என்றாலும் பின்னாளில் அமெரிக்கா மற்றும் உலகெங்கும் இந்தியா உட்பட வேரூன்றி வளர்ந்து விட்டது.

மாஃபியாவின் உண்மையான உள்ளூர் சொற்றொடரில் இதை அழகான, வசீகரமான, துணிவுமிக்க, தன்னம்பிக்கை போன்ற பொருள்படும்படியே பயன்படுத்தி வந்தனர்.

சந்திக் குறிப்பு:
சக வலைபதிவாளர் பத்ரிஅவர்கள் "தமிழிசை விழா"பற்றி ஒரு பதிவை தொடுத்தியிருந்தார்.அதில்
"...இதற்கு மாற்றாக தமிழிசையை முதன்மைப்படுத்தி சென்னை இசை மாஃபியாவை மீறி இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் தமிழிசைச் சங்கத்துக்கும் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்துக்கும் நமது பாராட்டுகள்.
தமிழிசையை மைய நீரோட்டத்துக்குள் கொண்டுவரமுடியும் என்றே நினைக்கிறேன். அதற்குச் சில வருடங்கள் பிடிக்கலாம். இன்னமும் அதிகமான புரவலர்கள் தேவை. இரண்டு நாள்கள் மட்டும் நடக்கும் விழா போதாது. 10௧5 நாள்கள் தொடர்ச்சியாக நடக்கும் விழாக்கள் - பல இடங்களிலும் - தேவை. முக்கியமான சபாக்களை தமிழிசை ரசிகர்கள் ஊடுருவி உறுப்பினர்களாக வேண்டும். பின் தேர்தல்களில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு டிசம்பர் இசை நிகழ்ச்சியிலும் குறைந்தது 25% முழுத்தமிழ் இசைக்காக நேரம் ஒதுக்கவேண்டும். பாடகர்களை தமிழிசையை அதிகப்படுத்தச் சொல்லவேண்டும். சென்னை
இசை மாஃபியாக்களை ஒழிக்க இது ஒன்றுதான் வழி."

என்று இசை மாஃபியாக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.அதைத் தப்பித்தவறி, தட்டுத்தடுமாறி தமிழை எழுத்துக்கூட்டி படித்துவிட்ட சில/பல ஒன்றிரண்டு இசை மாஃபியாக்களின் சகோதரர்களும்/மாமாக்களும்/மைத்துனர்களும் கடுஞ்சினம் கொண்டு, பத்ரி அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்று மிகப் பொறுமையோடும், பொறுப்புணர்ச்சியோடும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் இந்த சந்திக்குறிப்பிற்கு முன் உள்ள முன்குறிப்பை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு படித்தார்களேயானால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு பின்குறிப்பு:
இந்தப் பதிவில் எந்தவொரு உள்குத்தும் கிடையாது. மாஃபியாவின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுவது, அவரவர் மனவளர்ச்சியைப் பொறுத்தது!மாஃபியாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள
இங்கே செல்லவும்.

12/17/2005

நான் இந்தியனா?

இன்று காலை "தாழ்வாரத்தில்" அமர்ந்து, "மோக்கா"வையும் புகையையும் ருசி பார்த்துக் கொண்டிருந்த பொழுது நமது "வெள்ளைக்கார" நண்பர் வந்தார். வந்தவர் ஒரு "வணக்கம்" சொல்லி விட்டுச் சென்றிருந்தால் பரவாயில்லை. நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாண்கு கேள்விகள் கேட்டார்.

He:namast'e
Me:Goodmorning? Howaya?
He:freaking great! How you's doing?
Me:Awesome mate.
He:Hey, Do you smoke?
Me:yep, Sometimes!
He:But You are an Indian. You are god fearing, disciplined Hindu, right?
Me:So what?
He:The few Indians that I have met 's been telling me that Indians dont eat Non-Veg (especially cow), dont share a bed with a woman before a marriage, dont smoke, dont even drink n getting pissed.
Me:Mate, I got drunk & pissed. I do smoke. I eat all those meats available in the market irrespective of cow or pork.A'ight.
He:Then why are'nt wearing turban?
Me:OMG, That's different religion mate. They are sikhs.
He:You mean they are sick. hehehe
Me:I think You r still drolling with lastnite's piss. Anyways I am not that kind of "Indian" whom you have met.
He:A'ight, Then why do u converse in English with your other Indian mates? Hindi is supposed to Indian's mother toungue, isn't it? and its your national language too...
Me:yep, I agree with one. Hindi is our National language. But its not my mother tongue.
He:oh is it. well, then you should refer yourself with the race you belong to, not the Country you belong mate.
Me:I'm sorry, I didnt get you? You aint a racist ...right...hehehe
He:Mate! Take a french guy born in canada, He will refer himself as a french canadian. Not a Canadian. So you shud tell that You are a Tamil-Indian.
Me:I understood what you are saying, mate. But India is my native and I was born over there. So I think I should call myself as an Indian.
He:Whateva. Its up to you mate!cheers...

ஒரு வழியாக நான் இந்தியன் என்று கூறி "தப்பி" விட்டாலும், இந்த கேள்வி என்னுள்ளே பலமுறை எழுந்துள்ளது. இது வரை நான் சந்தித்த அல்லது அடிக்கடி உரையாடக்கூடிய "இந்தி"/இந்தி மட்டுமே" பேசும் நபர்கள்/நண்பர்கள் மிகச் சிலரே. இந்தி பேசும் நண்பர்களை விட பிரெஞ்சு/ஜெர்மன்/இட்டலி மொழி பேசும் நண்பர்களே எனக்கு அதிகம். ஆகையால் ஆங்கிலத்தைத் தவிர நான் வேறொரு மொழி கற்க அல்லது பேச முயன்றேன் என்றால் அது பிரெஞ்சு தானேயொழிய இந்தி அல்ல. நான் வட இந்தியாவிலேயே வசிக்க (சில காலமேயென்றாலும்) நேரிட்டிருந்தால் கூட எனக்கு இந்தியின் மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மேலும் இந்தியா முழுதிலும்(வட-கிழக்கைத் தவிர்த்து) பயனம் செய்திருந்த போதிலும், டில்லி தவிர வேறு எங்கேயும் எனக்கு அவ்வளவாக "கம்யூனிகேஷன்" பிரச்சினை ஏற்பட்டதும் இல்லை. டில்லியில் கூட ஓரளவு சமாளித்து விட்டேன் என்றே சொல்லலாம். டில்லியில் எனக்கேற்பட்ட "கம்யூனிகேஷன்" பிரச்சினை எனக்கு மொழி தெரியாததால் ஏற்பட்டதன்று. அது ஒரு படித்த மொழி வெறி (IIC secretary) பிடித்த ஐஏஎஸ் ஆபிசரினால் ஏற்பட்டது.
Delhi, Lodhi Estate, India International Centre ல் உள்ள ஒரு IAS OFFICER . ஒரு Study க்காக வேண்டி அங்கே சில தகவல்கள் சேகரிக்க வேண்டி இருந்தது. அதற்காக அந்த IAS OFFICER சந்தித்து உரையாடிய போது தான் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. நான் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க அவர் எனக்கு இந்தியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் எனது ஊர் மேயும் "இந்தி"ய அனுபவத்தினால் ஒரளவு "make-up" செய்து விட்டேன் என்று கூறலாம். இருந்தாலும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதினால் அவருடைய "ஸ்டெனோ" விடம் நான் ஆங்கிலத்தில் என்னுடைய இயலாமையைக் கூற, அவர் என்னிடம் ஆங்கிலத்தில் எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். நான் சென்னை என்றுக் கூறியவுடன் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. அட மலையாளத்துச் சேச்சி. சட சடவென்று தமிழில் பேசினார். அவர் மற்றொரு பிரிவிற்கு அழைத்து சென்று இன்னொரு சேட்டனிடம் அறிமுகப் படுத்தி அனைத்து உதவிகளையும் செய்தார். அவர் திருச்சியில் ஐந்தாண்டு காலம் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் அதனால் தமிழ் நன்றாக பேச முடிகிறது என்றும் கூறினார்.


மற்றபடி "இந்தி" என் வாழ்வில் ஒரு தேவையில்லாத விசயம். மேலும் இந்தியை நான் பள்ளியில் கற்றிருந்தால் தாய்மொழியை மறக்க வேண்டியதாய் இருந்திருக்கும். ஏனென்றால் எனக்குத் தெரிந்த சில தெலுங்கு நண்பர்கள் அவர்களுக்குள்ளேயே கூட பல நேரங்களில் இந்தியிலேயேப் பேசியிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது, அண்ணா இராஜாஜி...போன்றவர்களுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.

மற்றபடி, நான் இந்தியனாய் அறிமுகப்படுத்திக் கொள்வதை விட "தமிழனாய்" அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
குறைந்தபட்சம் எனக்கு என் தாய்மொழியை "பேசவும், எழுதவும்" தெரியும். அந்த ஒரு காரணம் போதும்...இந்த "இந்தி"ய வெறி பிடித்தவர்களிடத்தில் நான் தமிழன் என்று சொல்ல!

Hindu-Hindustan-Hindi-Hindia--------India வந்தது என்றால் எனக்கு எதுவுமே தேவையில்லை.

12/11/2005

சச்சின் - சிறந்த பத்து சதங்கள்!

10)பாகிஸ்தானுக்கெதிராக "முல்தான்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2004
பெற்ற ஓட்டங்கள் - 194*




9)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "சிட்னி"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2004
பெற்ற ஓட்டங்கள் - 241*



8)இங்கிலாந்துக்கெதிரான "ஹெடிங்லி"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2002
பெற்ற ஓட்டங்கள் - 193



7)மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான "போர்ட்-ஆப்-ஸ்பெய்ன்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2002
பெற்ற ஓட்டங்கள் - 117



6)தென்னாப்பிரிக்காவுக்கெதிரான் "ப்லூம்பொன்டெய்ன்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2001
பெற்ற ஓட்டங்கள் - 155



5)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "சென்னை"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2001
பெற்ற ஓட்டங்கள் - 126



4)பாகிஸ்தானுக்கெதிராக "சென்னை"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 199
பெற்ற ஓட்டங்கள் - 136



3)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "சென்னை"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 1998
பெற்ற ஓட்டங்கள் - 155



2)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "பெர்த்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 1992
பெற்ற ஓட்டங்கள் - 155



1)இங்கிலாந்துக்கெதிரான "ஒல்ட் ட்ராப்போர்ட்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 1990
பெற்ற ஓட்டங்கள் - 119




ஆதாரம்

12/05/2005

In the Mood for Love


நேற்று ஒரு அனாவசியமான கருத்து வேறுபாடு. அதனால் இன்னும் ஒரு வாரத்துக்கு செல் பேசினாலும், தொலை பேசினாலும் மறுமுனையில் வெறும் மவுனமும், மூச்சுக் காற்றுமே பதிலாக வருமென்பதால் வீட்டிலேயே செல் பேசியை போட்டு விட்டு, ஆமாம் போட்டுவிட்டு தான்...அருகிலுள்ள பல்கலை நூலகத்தை நோக்கிச் சென்றேன். என்ன தான் செல்பேசியை வீட்டிலேயே விட்டு(போட்டு)ச் சென்றாலும் மனத்தில் இருந்து மறைவதில்லை நினைவுகள். "MOOD" சரியில்லாத காரணத்தினால் பட்டியலைத் திறந்து நமக்கு என்ன "MOOD" இருக்கிறதோ அதை கனிணியில் தட்ட, வந்து விழுந்ததோ "In the mood for love".
சரி, என்ன தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் அது புத்தகமே கிடையாது, திரைப்படம்! 2000 -ம் ஆண்டு "கேன்" திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், ஒளி ஓவியம் மற்றும் எடிட்டிங் (காட்சி அமைப்பு?) ஆகியவற்றிற்கான விருதுகளை குவித்த திரைப்படம். இதன் இயக்குநர், "வோங்-காவ் வாய்". இது இவருக்கு 7வது திரைப்படம்.

சரி, இந்த திரைப்படத்தை இன்று பார்த்துவிட வேண்டுமென்று எனது துறையிலிருந்து நழுவி, Fischer AV reserve -க்கு நடந்தேன்.

திரைப்படத்திற்கு செல்லும் முன்னால் ஹாங்-காங் வாழ்க்கை முறையைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. ஹாங்-காங் - உலகின் மிக நெரிசலான நகரங்களில் ஒன்று. ஒரு இரட்டைப் படுக்கையறை கொண்ட வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் வசிக்கும் படியான நெரிசல். இரவு வாழ்க்கைக்கு சரியான எடுத்துகாட்டு. இது ஒரு தூங்கா நகரம் என்று சொல்லலாம். ஆசிய மற்றும் ஐரோப்பிய கலவை கொண்ட வாழ்க்கைமுறை. வெறும் கட்டிடங்களையும், மக்களையும் கொண்ட மருந்துக்கு கூட மரங்களைப் பார்க்க முடியாத நகரம்.நகரின் பல வீதிகளும், சாலைகளும் நம் டி-நகர் இரங்கநாதன் வீதியை ஞாபகப்படுத்தும்.

In the Mood for Love

இப்படிபட்ட நகரில், ஒரு குடியிருப்பில் இரு அடுத்தடுத்த வீடுகளில் இரு குடும்பங்கள் குடியேருகின்றன. இரு குடும்பத்தின் துணைகளும் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதைக் கண்டறிகிறார்கள் பாதிக்கப்பட்ட துணைவியர். காலப்போக்கில் பாதிக்கப்பட்ட இருவரும் அன்பிற்காக ஏங்கி தன் மனவலியை தாங்கி வருவது தெரிய வருகிறது. ஆனாலும் தங்கள் துணைகளைப் போல் அத்து மீறக் கூடாது என்பதிலும் நட்போடு மட்டுமே பழக வேண்டும் என்று உறுதியாக இருந்தாலும், இருவரும் ஒரு இனம் புரியாத அன்பினால் பிணைக்கப்படுகின்றனர். இதனால் இந்த இருவரும் தங்கள் மனம் ஒத்தபடியால், அதிக நேரம் ஒன்றாக செலவிடுகின்றனர்.இருவ்ரும் பரஸ்பரம் உதவிக்கொள்கிறனர். இது குடியிருப்பில் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் இருவரும் மனம் ஒத்தாவிடிலும், இருவரின் குடும்ப நலனுக்காக வேண்டிப் பிரிகின்றனர்.

இதுதான் கதைச் சுருக்கம் என்றாலும், படத்தின் ஒளிப்பதிவு, மற்றும் பின்னணி இசையமைப்பினால் ஒரு மிகப் பெரிய மன அதிர்வினை ஏற்படுத்துவது மறுக்க முடியாத உண்மை. பின்னணி இசை என்பது ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு வலு ஏற்படுத்தும் என்பதை நம்மூர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோர் இத்திரைப்படத்தை பார்த்தால் புரிந்துக் கொள்வார்கள்.

பின்னணி இசை அமைத்தவர் - மைக் கெலாசொ, கீ-போர்டு மற்றும் வயலின் போன்ற வாத்தியங்கள் மூலம் ஒரு மெல்லிசையை இரு கதாபாத்திரங்களை காட்டும் பொழுதும், ஒரு ஸ்பானிய மென் - காதற் பாடலை இரு கதாபாத்திரங்களின் மன நிலையை விவரிக்கும் பொழுதும், அவ்வப்பொழுது கூட்டுக் குடும்பங்களின் பேச்சு மற்றும் வானொலி இசையை மட்டுமே பின்னணி இசையாகக் கையாண்டிருக்கிறார்.

ஒளி ஓவியம் - கிறிஸ்டோபர் டொய்ல் மற்றும் மார்க் லீ பிங் பின். படம் முழுதும்/முக்கால் வாசி இரவு நேரங்களிலும், நான்கு சுவர்களுக்குள்ளேயும் மட்டுமே நடைபெருவதால் ஒளியை அருமையாகக் கையாண்டிருக்கிறார்கள். அதிலும் முடிவு காட்சியில் அத்தோடு இவர்கள் உடலால் மனதால் பிரிந்தாலும் அன்பினால் ஒன்றி வாழ்கிறார்கள் என்ற வரிகளோடு அங்கோர்வட்டின் சிற்ப கலையோடு ஒன்றி வரும் ஒளி ஒவியமும், இசையும் (சுமார் 2 நிமிடங்கள்) ஒரு வலிய மனாதிர்வினை அனைவருக்கும் ஏற்படுத்தும்.

இத்திரைப்படதின் மற்றொரு சிறப்பம்சம் கதைக்கு காரணமான அந்த இரு(களவொழுக்கத்தில் ஈடுபடும்) கதாபாத்திரங்களின் முகங்களை காட்டாதது.

It's a beautiful movie which is rich in visualization rather than conversation!

12/04/2005

பழம் தின்னு கொட்டை போடுவது


ஒரு விஞ்ஞானபூர்வமான கேள்வி, நம்ம தருமிக்கு! பழம் தின்னு கொட்டை போடுவது, கொட்டை போட்டு பழம் தின்னுவது! இதுல எது சரி? அவரோட விளக்கம் இங்கே!

என்னுடைய வாதம் என்னவென்றால், பழம் தின்று கொட்டை போடுவதே சரி. அதாவது நம்ம தருமி கேக்கறாரு, "அது எப்படி பழம்தின்னு கொட்டை போட்ட ஆளுன்னா ரொம்ப முத்தின கேசு..முச் experienced ஆளுன்னு அர்த்தம் வரும்? இப்போ பழம் இருக்கு; அத ஒருத்தர் தின்னுடறார்; கொட்டையைக் கீழே கடாசுறார். எல்லாமே ரொம்ப சின்ன, சாதாரணமான காரியம்தானே; இதிலெங்கே திறமை / experience/ வேற சிறப்பு இருக்கு? புரியலைங்களே!" னு...புரிய வெக்கிறது நம்ம கடமையில்லையா...

இங்க கொட்டை போடறது மேட்டர் இல்ல, கொட்டைய போட்டாக்கா இன்னும் ஒரு அஞ்சு இல்ல பத்து வருசம் கழிச்சு வேற யார்னா சாப்பிட ஒதவுமேன்னு முன்னாடியே தன்னோட நுண்ணறிவுக்கு எட்டி அந்த கொட்டைய சும்மானா தூக்கி போடாம ஒழுங்கா ஒரு எடத்துல போட்டு அதுக்கு தெனமும் தண்ணி ஊத்தி அதை வளக்கறார் பாருங்க, அது தாங்க அனுபவம்.அத தான் பழம் தின்னு கொட்டை போடறதுன்னு சொல்றாங்கன்னு நெனக்கிறன். மேற்படி நமக்கு எந்தவொரு அனுபவமும் கெடையாதுங்கொ...

ஆகா...தருமி புண்ணியத்துல ஒரு பதிவு! தாங்க்ஸ் வாத்தியாரே!!!

அரசியலும் கில்லியடிப்பதும்!


அரசியலும் கில்லியடிப்பதும் ஒரு சேரப் பிறந்தது. இந்தியாவாகட்டும், தென் ஆப்பிரிக்காவாகட்டும் அல்லது ஜிம்பாப்வே ஆகட்டும். அவரவர் லெவெலுக்குத் தகுந்த மாதிரி அவரவர் நாடுகளில் அரசியல் கில்லியடிக்கிறது என்பதே உண்மை.சர்வே என்பது ஒரு உப்புச்ப்பில்லாத விசயம் என்றாலும், சமீப காலத்து சர்வே ஒரு மிகச் சிறந்தக் காமெடியாகவேத் தெரிகிறது. NDTV மற்றும் தினமலர் போன்ற செய்தித்துறை ஊடகங்களில் எடுக்கப்பெற்ற ஒரு சர்வே. அதாவது, BCCI தலைவராக சரத்பவார் தேர்ந்தெடுக்கப்பட்டது கிரிக்கெட்டில் அரசியலைப் புகுத்திவிடுமா? என்பதே. கிரிக்கெட்டே ஒரு அரசியல் விளையாட்டு என்பது இவர்களுக்குத் தெரியாதா, என்ன? பட்டோடி, மாதவ்ராவ் சிந்தியா, ஜடேஜா போன்ற இவர்கள் அனைவருமே அரசியல் மூலமே கிரிக்கெட்டில் புகுந்தது. அதில் சிந்தியா அவர்கள் BCCI தலைவராக இருந்தது இவர்கள் அறியாததா? மேலும் கவாஸ்கர், டால்மியா போன்றோர் ஆடாத பிரதேச அரசியலா சரத்பவார் ஆடிவிடப் போகிறார். டால்மியா ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி பிறகு தான் கிரிக்கெட் போர்டு தலைவர். இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யும் கமிட்டி கூட்டத்தில் வெறும் வங்காள கிரிக்கெட் போர்டு தலைவருக்கு என்ன வேலை? அரசியல் என்பது அதிகாரத்தைக் குறிக்கும் சொல் என்றால் டால்மியா செய்யாத எந்தவொரு அரசியல் தலையீட்டயும் விடப் பெரிதாக பவாரால் செய்ய இயலாது. சரத்பவார் அரசியல்வாதி என்றால் அந்த அரசியல்வாதியையே தோற்கடிக்கக் கூடிய அரசியல் பாடம் தெரிந்தவர் டால்மியா. இல்லாவிட்டால் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத ஒருவரை நிறுத்தி தானே 4 ஓட்டுக்கள் போட்டு ஒரு டம்மியை BCCI தலைவராக்கிய அரசியல் சித்தம் அறிந்தவர் டால்மியா. சரத்பவார் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், பலகாலம் மத்திய அமைச்சராய் இருந்து மேலாண்மை செய்தவர். அவருக்கு கிரிக்கெட் அரசியல் எப்படி ஆடவேண்டும் என்று நன்றாகவேத் தெரியும். மற்றபடி இவர் பிரதேச அரசியலைப் பின்பற்றாமல் இருந்தால் சரி!

கொசுறு செய்தி!

ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு காரணம், கங்குலியின "அந்த" ஒரு சதத்தையே காரணியாக காட்டுகிறார்கள். இதனாலேயே தாய்புவின் சம்பளம் குறைக்கப்பட்டதும், அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகவும் தெரிய வருகிறது. ஆக மொத்தம் இந்திய கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதை விட உலகளவில் ஒரு தேசிய அணியை நிலைகுலையச் செய்த கங்குலிக்கு வாழ்த்துக்கள்.:)

சற்று முன்னர் வந்த செய்தி!

தனது பார்ம் ஐ நிருபிக்காமல் இருக்கவே மழை, புயல் அடிக்கும் சென்னையில் போட்டியை அமைத்ததற்காக புதிதாக பதவியேற்றுள்ள BCCI தலைவர் சரத்பவார் மீது கங்குலி குற்றஞ்சாட்டியுள்ளார். :)